spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் உயிரிழப்பு!

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் உயிரிழப்பு!

- Advertisement -
Rajalakshmi
Rajalakshmi

மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மில்லில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் மூன்று பேருக்கும் திருமணமாகி முதலாவது மகள் சண்முகஜெயா, 3-வது மகள் கீதா ஆகியோர் கோவில்பட்டியிலும், 2-வது மகள் கலா தூத்துக்குடியிலும் வசித்து வருகின்றனர்.

கடந்த சுமார் 8 ஆண்டு காலமாக சாமிநாதன் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இவரை அவரது மனைவி ராமலட்சுமி உடனிருந்து கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராமலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ராஜலட்சுமியின் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

இதற்கிடையே மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் மன வேதனையில் இருந்த சாமிநாதனும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் சாமிநாதன் ராமலட்சுமி ஆகிய இருவரது உடலும் ஒரே மேடையில் தகனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe