அரிய வகை சிலந்திகளும், கஞ்சாக்களும் கடத்தல்!

Spider
Spider

சென்னை மாவட்டம், மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கு தபால் பிரிவுக்கு போதைப் பொருட்கள், கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளன.

இதனையடுத்து சரக்கு விமானத்தில் வந்த பார்சல்களை சரக்கக பிரிவு ஆய்வு செய்தனர் .

அதில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்திற்கு வந்த பார்சலை ஆய்வு செய்தபோது, 10 சிலந்திப் பூச்சிகள் போலந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டன என தெரியவந்துள்ளது.

இதனை மத்திய வன ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது அவை அனைத்தும்’ கொடிய வகை’ சிலந்திப் பூச்சிகள் என தெரிய வந்துள்ளன.

இந்நிலையில் சிலந்திப்பூச்சி பார்சலை உடனடியாக போலந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர்.

இதேபோல் சென்னை முகவரில், 8 தபால்கள் வந்துள்ளன. அவை அமெரிக்கா நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளன என தெரியவந்தது.

அவற்றில் அமெரிக்காவில் இருந்து வந்த 3 தபால் பார்சல்களை திறந்து பார்த்தபோது அதில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா 274 கிராம் இருப்பதை கண்டு பிடித்தனர்.

பின்னர் நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்த பார்சலில் 92 கிராம் எடை அளவில் போதை மாத்திரைகள் இருந்துள்ளன.
இவையனைத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

kantcha
kantcha

பார்சலில் இருந்த கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் மதிப்பு 10 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.
பார்சலில் இருந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என தெரிய வந்தன.

சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த சிலந்திப் பூச்சிகள், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தி வந்ததை குறித்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், அந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories