ஹெலிகாப்டரில் விஐபி தரிசனம்: எச்சரிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!

thirupathi 2
thirupathi 2

உலகளவில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக திருமலை திருப்பதி உள்ளது. இந்தக் கோயில் ஆண்டுதோறும் பல கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

பக்தர்கள் மூலம் கிடைக்கும் வருமானமும் பல கோடிகளைத் தாண்டும். சில விநாடிகள் மட்டுமே கிடைக்கும் ஏழுமலையானின் தரிசனத்திற்காக பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகை தரிசனத்திற்கும் ஒவ்வொரு ரேட் என்ற முறையில் செயல்படுத்தப்படுகிறது.

சாதாரண மக்களுக்கென இலவச தரிசனம், நடுத்தர மக்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி ரேட்டில் ஒரு தரிசனம், பெரிய தலைக்கட்டுகளுக்கு விஐபி தரிசனம் என பல வகையான தரிசனங்கள் உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கட்டுக்குள் வந்திருப்பதால் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன் தொடங்கியது. நினைத்ததை விட அதிவேகமாகவே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

10 May 23 helicopter
10 May 23 helicopter

விஷயம் இப்படியிருக்கையில் ஹெலிகாப்டரில் விஐபி தரிசனம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதாவது பக்தர் ஒருவர் 1 லட்சத்து 11 ஆயிரத்து 116 ரூபாய் கொடுத்தால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் செல்வோம்.

திருப்பதியில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். பின்னர் ஏழுமலையான் விஐபி தரிசனம் காட்டப்பட்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாகவே ஊருக்குச் செல்லலாம் என அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருப்பதி தேவஸ்தானம் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளது.

விஐபி தரிசனத்தை நேரடியாக விஐபிகளுக்கும் அவர்கள் சிபாரிசு கடிதம் இருந்தால் மட்டுமே அளிப்போம். இதுவே இங்கே நடைமுறை. இதுபோன்ற தனியார்களுக்கோ சுற்றுலா நிறுவனங்களுக்கோ விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படாது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது.

ஆகவே கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை நம்பாமல் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றுமாறு பத்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories