ஹெலிகாப்டரில் விஐபி தரிசனம்: எச்சரிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!

thirupathi 2
thirupathi 2

உலகளவில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக திருமலை திருப்பதி உள்ளது. இந்தக் கோயில் ஆண்டுதோறும் பல கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

பக்தர்கள் மூலம் கிடைக்கும் வருமானமும் பல கோடிகளைத் தாண்டும். சில விநாடிகள் மட்டுமே கிடைக்கும் ஏழுமலையானின் தரிசனத்திற்காக பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகை தரிசனத்திற்கும் ஒவ்வொரு ரேட் என்ற முறையில் செயல்படுத்தப்படுகிறது.

சாதாரண மக்களுக்கென இலவச தரிசனம், நடுத்தர மக்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி ரேட்டில் ஒரு தரிசனம், பெரிய தலைக்கட்டுகளுக்கு விஐபி தரிசனம் என பல வகையான தரிசனங்கள் உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கட்டுக்குள் வந்திருப்பதால் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன் தொடங்கியது. நினைத்ததை விட அதிவேகமாகவே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

10 May 23 helicopter
10 May 23 helicopter

விஷயம் இப்படியிருக்கையில் ஹெலிகாப்டரில் விஐபி தரிசனம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதாவது பக்தர் ஒருவர் 1 லட்சத்து 11 ஆயிரத்து 116 ரூபாய் கொடுத்தால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் செல்வோம்.

திருப்பதியில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். பின்னர் ஏழுமலையான் விஐபி தரிசனம் காட்டப்பட்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாகவே ஊருக்குச் செல்லலாம் என அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருப்பதி தேவஸ்தானம் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளது.

விஐபி தரிசனத்தை நேரடியாக விஐபிகளுக்கும் அவர்கள் சிபாரிசு கடிதம் இருந்தால் மட்டுமே அளிப்போம். இதுவே இங்கே நடைமுறை. இதுபோன்ற தனியார்களுக்கோ சுற்றுலா நிறுவனங்களுக்கோ விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படாது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது.

ஆகவே கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை நம்பாமல் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றுமாறு பத்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories