December 6, 2025, 12:01 PM
29 C
Chennai

ஹெலிகாப்டரில் விஐபி தரிசனம்: எச்சரிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!

thirupathi 2
thirupathi 2

உலகளவில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக திருமலை திருப்பதி உள்ளது. இந்தக் கோயில் ஆண்டுதோறும் பல கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

பக்தர்கள் மூலம் கிடைக்கும் வருமானமும் பல கோடிகளைத் தாண்டும். சில விநாடிகள் மட்டுமே கிடைக்கும் ஏழுமலையானின் தரிசனத்திற்காக பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகை தரிசனத்திற்கும் ஒவ்வொரு ரேட் என்ற முறையில் செயல்படுத்தப்படுகிறது.

சாதாரண மக்களுக்கென இலவச தரிசனம், நடுத்தர மக்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி ரேட்டில் ஒரு தரிசனம், பெரிய தலைக்கட்டுகளுக்கு விஐபி தரிசனம் என பல வகையான தரிசனங்கள் உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கட்டுக்குள் வந்திருப்பதால் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன் தொடங்கியது. நினைத்ததை விட அதிவேகமாகவே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

10 May 23 helicopter
10 May 23 helicopter

விஷயம் இப்படியிருக்கையில் ஹெலிகாப்டரில் விஐபி தரிசனம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதாவது பக்தர் ஒருவர் 1 லட்சத்து 11 ஆயிரத்து 116 ரூபாய் கொடுத்தால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் செல்வோம்.

திருப்பதியில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். பின்னர் ஏழுமலையான் விஐபி தரிசனம் காட்டப்பட்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாகவே ஊருக்குச் செல்லலாம் என அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருப்பதி தேவஸ்தானம் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளது.

விஐபி தரிசனத்தை நேரடியாக விஐபிகளுக்கும் அவர்கள் சிபாரிசு கடிதம் இருந்தால் மட்டுமே அளிப்போம். இதுவே இங்கே நடைமுறை. இதுபோன்ற தனியார்களுக்கோ சுற்றுலா நிறுவனங்களுக்கோ விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படாது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது.

ஆகவே கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை நம்பாமல் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றுமாறு பத்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories