ஹெலிகாப்டரில் விஐபி தரிசனம்: எச்சரிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!

thirupathi 2
thirupathi 2

உலகளவில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக திருமலை திருப்பதி உள்ளது. இந்தக் கோயில் ஆண்டுதோறும் பல கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

பக்தர்கள் மூலம் கிடைக்கும் வருமானமும் பல கோடிகளைத் தாண்டும். சில விநாடிகள் மட்டுமே கிடைக்கும் ஏழுமலையானின் தரிசனத்திற்காக பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகை தரிசனத்திற்கும் ஒவ்வொரு ரேட் என்ற முறையில் செயல்படுத்தப்படுகிறது.

சாதாரண மக்களுக்கென இலவச தரிசனம், நடுத்தர மக்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி ரேட்டில் ஒரு தரிசனம், பெரிய தலைக்கட்டுகளுக்கு விஐபி தரிசனம் என பல வகையான தரிசனங்கள் உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கட்டுக்குள் வந்திருப்பதால் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன் தொடங்கியது. நினைத்ததை விட அதிவேகமாகவே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

10 May 23 helicopter
10 May 23 helicopter

விஷயம் இப்படியிருக்கையில் ஹெலிகாப்டரில் விஐபி தரிசனம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதாவது பக்தர் ஒருவர் 1 லட்சத்து 11 ஆயிரத்து 116 ரூபாய் கொடுத்தால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் செல்வோம்.

திருப்பதியில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். பின்னர் ஏழுமலையான் விஐபி தரிசனம் காட்டப்பட்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாகவே ஊருக்குச் செல்லலாம் என அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருப்பதி தேவஸ்தானம் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளது.

விஐபி தரிசனத்தை நேரடியாக விஐபிகளுக்கும் அவர்கள் சிபாரிசு கடிதம் இருந்தால் மட்டுமே அளிப்போம். இதுவே இங்கே நடைமுறை. இதுபோன்ற தனியார்களுக்கோ சுற்றுலா நிறுவனங்களுக்கோ விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படாது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது.

ஆகவே கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை நம்பாமல் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றுமாறு பத்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories