ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை ஐந்து வருடங்கள் வரை அதிகரித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது .
அதன்படி , ” பொதுப்பிரிவினருக்கான வயது 40 லிருந்து 45 ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதர பிரிவினருக்கு வயது 45 லிருந்து 50 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தளர்வு சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுவதாகவும் இது அடுத்த ஆண்டு இறுதி வரை மட்டுமே பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது .
ஜனவரி 1 ஆம் தேதி 2023 ஆம் வருடம் முதல் பொதுப்பிரிவினருக்கு உச்ச வரம்பு 42 வயதாகவும் , இதர பிரிவினருக்கு 47 வயதாகவும் உச்ச வரம்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் நேரடி நியமனத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அதனால் பலரும் காத்திருந்து நிர்ணயிக்கப்பட்ட வயதை தாண்டிவிட்டனர்.
எனவே வயது வரம்பை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று அவர்கள் பயன்பெறும் வகையில் வயது வரம்பு 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.