spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகல்விஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஐந்து வருடங்கள் அதிகரிப்பு!

ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஐந்து வருடங்கள் அதிகரிப்பு!

- Advertisement -
tnsecretariat
tnsecretariat

ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை ஐந்து வருடங்கள் வரை அதிகரித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது .

அதன்படி , ” பொதுப்பிரிவினருக்கான வயது 40 லிருந்து 45 ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதர பிரிவினருக்கு வயது 45 லிருந்து 50 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தளர்வு சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுவதாகவும் இது அடுத்த ஆண்டு இறுதி வரை மட்டுமே பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது .

ஜனவரி 1 ஆம் தேதி 2023 ஆம் வருடம் முதல் பொதுப்பிரிவினருக்கு உச்ச வரம்பு 42 வயதாகவும் , இதர பிரிவினருக்கு 47 வயதாகவும் உச்ச வரம்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் நேரடி நியமனத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

அதனால் பலரும் காத்திருந்து நிர்ணயிக்கப்பட்ட வயதை தாண்டிவிட்டனர்.

எனவே வயது வரம்பை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று அவர்கள் பயன்பெறும் வகையில் வயது வரம்பு 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe