பாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 21, கண்ணம்மா – என் குழந்தை

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

     இப்பாடல் பராசக்தியைக் குழந்தையாகக் கொண்டு பாடிய பாட்டு. பைரவி இராகத்தில், ரூபக தளத்தில் அமைந்த பாடல். பராசக்தி நாராயணனின் தங்கை எனக் கருதப்படுபவர். கண்ணன் திருஅவதாரத்தின்போது, சிறையில் பிறந்த கண்ணனை நந்தகோபனின் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு அங்கேயிருக்கின்ற பெண் குழந்தையை வசுதேவர் கொண்டுவருகிறார். கம்சன் வழக்கம்போல அந்தப் பெண் குழந்தையின் கால்களைப் பிடித்து சுவற்றில் அடித்துக் கொல்ல முனைகிறான். அந்தப் பெண் குழந்தை அவன் கையிலிருந்து விடுபட்டு, விண்ணிற்குச் சென்று, பராசக்தியாக காட்சியளிக்கும். அந்த வகையில் பராசக்தி, பாரதிக்கு கண்ணனின் மறு வடிவும். ஒரு தாய் தன்னுடைய குழந்தையைப் பற்றி எப்படியெல்லாம் கொஞ்சுவாள் எனப் பாடல் சொல்லுகிறது. இனிப் பாடலைக் காணலாம்.  

[ஸ ஸ ஸ – ஸா ஸா – பபப

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

தநீத – பதப – பா

பபப -பதப – பமா – கரிஸா

ரிகம – ரிகரி – ஸா

என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு

மனோபாவப்படி மாற்றி பாடுக. – என்று பாரதியார் பாடலின் தொடக்கத்தில் கூறியிருக்கிறார்.]

சின்னஞ் சிறு கிளியே, – கண்ணம்மா!

செல்வக் களஞ்சியமே!

என்னைக் கலி தீர்த்தே – உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்! … 1

பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா

பேசும்பொற் சித்திரமே!

அள்ளி யணைத்திடவே – என் முன்னே

ஆடி வருந் தேனே! . … 2

ஓடி வருகையிலே – கண்ணம்மா!

உள்ளங் குளிரு தடீ!

ஆடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்

ஆவி தழுவு தடீ! … 3

உச்சி தனை முகந்தால் – கருவம்

ஓங்கி வளரு தடீ!

மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ! … 4

கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்

கள்வெறி கொள்ளு தடீ!

உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா!

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

உன்மத்த மாகுதடீ! … 5

சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது

சஞ்சல மாகு தடீ!

நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு

நெஞ்சம் பதைக்கு தடீ! … 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் – என்நெஞ்சில்

உதிரம் கொட்டு தடீ!

என்கண்ணிற் பாவையன்றோ? – கண்ணம்மா!

என்னுயிர் நின்ன தன்றோ? … 7

சொல்லு மழலையிலே – கண்ணம்மா!

துன்பங்கள் தீர்த்திடு வாய்;

முல்லைச் சிரிப்பாலே – எனது

மூர்க்கந் தவிர்த்திடு வாய். … 8

இன்பக் கதைகளெல்லாம் – உன்னைப்போல்

ஏடுகள் சொல்வ துண்டோ ?

அன்பு தருவதிலே – உனைநேர்

ஆகுமோர் தெய்வ முண்டோ ? … 9

மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல்

வைர மணிக ளுண்டோ ?

சீர்பெற்று வாழ்வதற்கே – உன்னைப்போல்

செல்வம் பிறிது முண்டோ ? … 10

இது ஒரு மிக மிக எளிய பாடல். விளக்கவுரை தேவையில்லை. குழந்தைகளுக்கான பாடல் அல்ல. தாய்மார்களுக்கான பாடல். ஐயமிருந்தால்

“கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்

கள்வெறி கொள்ளு தடீ!”

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

என்ற வரிகளை மீண்டும் படியுங்கள். இருப்பினும் இதன் விளக்கவுரையை நாளை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories