February 22, 2026, 5:54 AM
25.4 C
Chennai

பாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 21, கண்ணம்மா – என் குழந்தை

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

     இப்பாடல் பராசக்தியைக் குழந்தையாகக் கொண்டு பாடிய பாட்டு. பைரவி இராகத்தில், ரூபக தளத்தில் அமைந்த பாடல். பராசக்தி நாராயணனின் தங்கை எனக் கருதப்படுபவர். கண்ணன் திருஅவதாரத்தின்போது, சிறையில் பிறந்த கண்ணனை நந்தகோபனின் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு அங்கேயிருக்கின்ற பெண் குழந்தையை வசுதேவர் கொண்டுவருகிறார். கம்சன் வழக்கம்போல அந்தப் பெண் குழந்தையின் கால்களைப் பிடித்து சுவற்றில் அடித்துக் கொல்ல முனைகிறான். அந்தப் பெண் குழந்தை அவன் கையிலிருந்து விடுபட்டு, விண்ணிற்குச் சென்று, பராசக்தியாக காட்சியளிக்கும். அந்த வகையில் பராசக்தி, பாரதிக்கு கண்ணனின் மறு வடிவும். ஒரு தாய் தன்னுடைய குழந்தையைப் பற்றி எப்படியெல்லாம் கொஞ்சுவாள் எனப் பாடல் சொல்லுகிறது. இனிப் பாடலைக் காணலாம்.  

[ஸ ஸ ஸ – ஸா ஸா – பபப

தநீத – பதப – பா

பபப -பதப – பமா – கரிஸா

ரிகம – ரிகரி – ஸா

என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு

மனோபாவப்படி மாற்றி பாடுக. – என்று பாரதியார் பாடலின் தொடக்கத்தில் கூறியிருக்கிறார்.]

சின்னஞ் சிறு கிளியே, – கண்ணம்மா!

செல்வக் களஞ்சியமே!

என்னைக் கலி தீர்த்தே – உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்! … 1

பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா

பேசும்பொற் சித்திரமே!

அள்ளி யணைத்திடவே – என் முன்னே

ஆடி வருந் தேனே! . … 2

ஓடி வருகையிலே – கண்ணம்மா!

உள்ளங் குளிரு தடீ!

ஆடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்

ஆவி தழுவு தடீ! … 3

உச்சி தனை முகந்தால் – கருவம்

ஓங்கி வளரு தடீ!

மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ! … 4

கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்

கள்வெறி கொள்ளு தடீ!

உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா!

உன்மத்த மாகுதடீ! … 5

சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது

சஞ்சல மாகு தடீ!

நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு

நெஞ்சம் பதைக்கு தடீ! … 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் – என்நெஞ்சில்

உதிரம் கொட்டு தடீ!

என்கண்ணிற் பாவையன்றோ? – கண்ணம்மா!

என்னுயிர் நின்ன தன்றோ? … 7

சொல்லு மழலையிலே – கண்ணம்மா!

துன்பங்கள் தீர்த்திடு வாய்;

முல்லைச் சிரிப்பாலே – எனது

மூர்க்கந் தவிர்த்திடு வாய். … 8

இன்பக் கதைகளெல்லாம் – உன்னைப்போல்

ஏடுகள் சொல்வ துண்டோ ?

அன்பு தருவதிலே – உனைநேர்

ஆகுமோர் தெய்வ முண்டோ ? … 9

மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல்

வைர மணிக ளுண்டோ ?

சீர்பெற்று வாழ்வதற்கே – உன்னைப்போல்

செல்வம் பிறிது முண்டோ ? … 10

இது ஒரு மிக மிக எளிய பாடல். விளக்கவுரை தேவையில்லை. குழந்தைகளுக்கான பாடல் அல்ல. தாய்மார்களுக்கான பாடல். ஐயமிருந்தால்

“கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்

கள்வெறி கொள்ளு தடீ!”

என்ற வரிகளை மீண்டும் படியுங்கள். இருப்பினும் இதன் விளக்கவுரையை நாளை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories