வீடு தேடி வந்து உதவி கேட்டு புற்றுநோயாளி ரசிகர்! சிகிச்சை செலவை ஏற்ற நடிகர்!

chiranchivi
chiranchivi

தனது ரசிகரின் புற்றுநோய் சிகிச்சை செலவை நடிகர் சிரஞ்சீவி ஏற்றுக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘ஆச்சார்யா’, மோகன்ராஜா இயக்கத்தில் ‘காட்ஃபாதர்’, மெஹெர் ரமேஷ் இயக்கத்தில் ‘போலா ஷங்கர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (26.10.21) அன்று விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிரஞ்சீவியின் ரசிகரான வெங்கட் என்பவர் சிரஞ்சீவியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு சிரஞ்சீவியைச் சந்தித்த அவர் தனக்குப் புற்றுநோய் இருப்பது குறித்தும், அதற்கு சிகிச்சை மேற்கொள்ளப் போதுமான வசதி இல்லை என்றும் அவரிடம் கூறியுள்ளார்.

வெங்கட்டின் நிலையை அறிந்த சிரஞ்சீவி அவருடைய சிகிச்சை செலவுக்குத் தான் உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும், அவருடைய மருத்துவ அறிக்கைகளை வாங்கிப் பார்த்த சிரஞ்சீவி, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு இன்னொரு முறை பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அந்த ரசிகரின் உடனடி சிகிச்சை செலவுக்காக ரூ.2 லட்சத்தையும் சிரஞ்சீவி கொடுத்துள்ளார். வெங்கட்டின் உடல்நிலை குறித்து தொடர்ந்து தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு சிரஞ்சீவி தனது அலுவலக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

சிரஞ்சீவியின் உதவி குறித்து செய்தியாளர்களிடம் வெங்கட் கூறும்போது, ”அவரது ரசிகனாக இருப்பது ஆசிர்வாதம். இந்த ஜென்மத்தில் என்னால் சிரஞ்சீவிக்குப் போதுமான நன்றி தெரிவிக்க இயலாது” என்று தெரிவித்தார்.

பலரும் சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு சிரஞ்சீவிக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories