December 6, 2025, 1:19 PM
29 C
Chennai

Jio phone குறித்து பரவும் போலி செய்திகள்: எச்சரிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம்!

jio
jio

இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next), சந்தைக்கு வரும் முன்பே, ஜியோபோன் நெக்ஸ்ட் தொலைபேசிகள் தொடர்பான போலி இணைப்புகள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) போன் இன்னும் சந்தைக்கு வருவதற்கு முன்பே, அந்த போனைக் குறித்து சில அன்பாக்சிங் வீடியோக்கள் யூடியூப் சேனலில் (Youtube Channel) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் இது தான் “ஜியோபோன் நெக்ஸ்ட்” எனக்கூறி பேக் செய்யப்பட்ட பாக்ஸில் இருந்து ஒரு புதிய போன் காண்பிக்கப்படுகிறது. “ஜியோபோன் நெக்ஸ்ட்” தொலைபேசியின் மாதிரி போல இருக்கும் போன், சார்ஜர் உட்பட பாக்ஸில் இருக்கும் பொருட்களை குறித்து விவரங்கள் காட்டப்படுகின்றன.

அதாவது ஒரு புதிய போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதுக்குறித்து மதிப்பாய்வு செய்யும் பல வீடியோக்கள் யூடியூப் சேனல் உட்பட சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது வழக்கம். ஆனால், இன்னும் சந்திக்கு வராத ஜியோபோன் நெக்ஸ்ட் குறித்து மதிப்பாய்வு செய்யும் வீடியோக்கள் யூடியூப் சேனலில் வெளிவந்துள்ளன.

ஜியோ தனது ஜியோபோன் நெக்ஸ்ட் தயாரிப்பது தொடர்பான குறும்படத்தை வெளியிட்டது. அந்த வீடியோவையும், போலி வீடியோவையும் (Fake Video) இணைத்து பார்த்தால் உண்மைத் தன்மை தெரியவரும்.

இந்த வீடியோக்கள் முற்றிலும் போலியானது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) ) நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் போலி வீடியோக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

தற்போது எங்கள் தரப்பில் இருந்து போன் அறிமுகப்படுத்தப்படவில்லை. இது இன்னும் சந்திக்கும் வரவில்லை. அப்படி இருக்கையில், டெலிவரி எப்படி நடக்கும்? நீங்கள் இந்த ஃபோனை வாங்க விரும்பினால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை காத்திருக்கவும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகம் தொடர்பான எந்த தேதியையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் அடுத்த தீபாவளிக்கு ஜியோபோன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளமாக ஜியோபோன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3499 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories