December 6, 2025, 2:56 PM
29 C
Chennai

பழைய நாணயங்கள் ரூபாய்கள்.. எச்சரிக்கும் RBI!

old money - 2025

கடந்த சில மாதங்களாக, பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை (Old Notes) வாங்குவதும் விற்பதும் அதிகரித்து வருகிறது. பழங்கால நோட்டுகள் மற்றும் நாணயங்களை மக்கள் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

பல வலைத்தளங்களில், இந்த நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு நல்ல தொகை கிடைப்பதாகக் கூறப்படுகின்றது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்கப்படுகின்றன.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை (Old Coins) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்வதற்காக சில மோசடிக் கூறுகள் மத்திய வங்கியின் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

rbi
rbi

நீங்களும் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்கவோ அல்லது வாங்கவோ தயாராக இருந்தால், முதலில் ரிசர்வ் வங்கியின் இந்த தகவலைப் பற்றி கண்டிப்பாக முழுமையாக தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இதற்காக தினமும் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து வருகிறார்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை சில நிறுவனங்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றன. மற்றும் பல்வேறு ஆன்லைன், ஆஃப்லைன் தளங்கள் மூலம் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பதற்கு கட்டணம்/கமிஷன்கள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் பெயரில் வசூலிக்கின்றன என ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது. இது முறையான செயல்பாடு அல்ல” என கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில், ‘இதுபோன்ற எந்த நடவடிக்கையிலும் ரிசர்வ் வங்கி ஈடுபடவில்லை. ரிசர்வ் வங்கி இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு யாரிடமும் கட்டணம் அல்லது கமிஷன் எதுவும் கேட்காது.

அதேவேளையில், இவ்வாறான செயற்பாடுகளுக்காக எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ எந்தவொரு அங்கீகாரத்தையும் ரிசர்வ் வங்கி வழங்கவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை விற்று பணம் ஈட்ட நினைப்பவர்கள், இதுபோன்ற செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி (Reserve Bank) கையாள்வதில்லை என்பதையும் இதற்கு எந்தவித கட்டணம் அல்லது கமிஷனையும் ரிசர்வ் வங்கி வசூலிக்கவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் பெயரில் யாரும் உங்களை ஏமாற்றாமல் இருக்க இந்த தகவல் உங்களுக்கு உதவும். ரிசர்வ் வங்கியின் பெயரில் இந்த செயல்களில் ஈடுபடுபவர்களின் வலையில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories