புனித் ராஜ்குமாரின் மரணத்தால் மருத்துவமனையில் குவிந்த கூட்டம்!

puneeth
puneeth

நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் 46 வயதில் மரணம் அடைந்தது இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடையே இதய நோய் தொடர்பாக பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதய பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் பல மடங்காக அதிகரித்துள்ளது.

திங்கட்கிழமை, ராஜ்யோத்சவா தினத்தையொட்டி, பொது விடுமுறை என்றாலும், நெஞ்சுவலி, நெஞ்சில் எரியும் உணர்வு, கை வலி போன்ற பிரச்சினை இருப்பதாக அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளதாக பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றன.

“பெங்களூரில் உள்ள ஜெயதேவா அரசு மருத்துவமனையில் மட்டும் நவம்பர் 1 ஆம் தேதி மதியம் வரை 1,500 புற நோயாளிகளைப் பார்த்தோம், மேலும் மைசூரில் இந்த மருத்துவமனை கிளையில் 1,000 புற நோயாளிகள் குவிந்திருந்தனர்.

பொதுவாக, அவசர சிகிச்சை பிரிவில் சுமார் 75 கேஸ்களை பார்க்கிறோம், ஆனால் ஞாயிற்றுக்கிழமை 550 கேஸ்களை பார்த்தோம், “என்று ஜெயதேவா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சிஎன் மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.

பல மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், இளைஞர்கள் மட்டுமல்ல, வயதானவர்களும் கூட பரிசோதனை செய்ய குவிந்ததாக தெரிவித்தனர். இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி, ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் டாக்டர் பிரதீப் குமார் கூறுகையில், அவசர அறை மற்றும் OPD ஆகியவற்றில் குறைந்தது மூன்று மடங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மக்கள் நெஞ்சு வலி தொடர்பான புகார்களுடன் வருகிறார்கள், மேலும் ECG, எக்கோ கார்டியோகிராம், TMT சோதனைகள் மற்றும் ட்ரோபோனின் போன்ற சோதனைகள் செய்ய வற்புறுத்துகிறார்கள். சிலர் கரோனரி CT ஆஞ்சியோகிராபி பற்றி விசாரித்தனர் பல நோயாளிகளுக்கு மனோவியல் அறிகுறிகள் மட்டுமே இருந்தது. நிஜமான உடல்நிலை பாதிப்பு இல்லை” என்று தெரிவித்தார்.

“இருதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இல்லாத பல நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். புனித் ராஜ்குமார் மரணம் குறித்து தொடர்ந்து டிவியில் செய்திகளை பார்த்த பிறகு ஏற்பட்ட பீதி மற்றும் வாட்ஸ்அப்பில் வைரலான செய்திகளை பார்த்த பீதி காரணமாக இதுபோன்று மக்கள் மருத்துவமனைகளுக்கு படையெடுத்துள்ளனர்.

சிறு வலிகளை புறக்கணிக்க வேண்டாம் என்று மக்கள் நினைப்பது நல்ல விஷயம்தான். இவ்வாறு டாக்டர் மஞ்சுநாத் தெரிவித்தார்.

​​அப்பல்லோ மருத்துவமனை இருதயநோய் நிபுணர் டாக்டர் அபிஜித் குல்கர்னி கூறுகையில், “இப்போது மட்டுமல்ல. சிரஞ்சீவி சர்ஜா, சித்தார்த் சுக்லா போன்ற இளம் வயது பிரபலங்கள் இறந்த பிறகும் இப்படி ஒரு கூட்டத்தை பார்த்தோம். புனித் ராஜ்குமார் இறந்த தினத்தன்று, இதய நோய் தொடர்பான புகார்களுடன் வந்த நோயாளிகளால் அவசரநிலை பிரிவு நிரம்பியது,” என்றார்.

இருப்பினும், ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் இதய நோய் நிபுணரான டாக்டர் ராஜ்பால் சிங் கூறுகையில், ஒரே நாளில் மக்கள் கூட்டமாக மருத்துவமனைகளுக்கு விரைவதை விட, மக்கள் ஒரு முழுமையான வருடாந்திர பரிசோதனை செய்தால் போதும்.

ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும், சிறந்த உடல் எடையை பராமரிக்க வேண்டும், புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றார்.

“வாரத்தில் குறைந்தது ஆறு நாட்களாவது நாளொன்றுக்கு 45 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது ஜாகிங் போன்ற மிதமான தீவிர உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.

மிகவும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் ECG/echo மற்றும் தேவைப்பட்டால், TMT டெஸ்ட் செய்து தங்களை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார், டாக்டர் பிரதீப்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories