திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா!

murugan thiruchendur
murugan thiruchendur

திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தற்போது கொரோனா பாதுகாப்பை முன்னிட்டு இந்த ஆண்டு கோவிலில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. ஐப்பசி மாதம் ஏழு நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவினையொட்டி கோவில் விசாக கொறடு மண்டபத்தில் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு கோயில் ஸ்தானிகர் பட்டர்கள் கந்தசஷ்டி காப்பு கட்டினர். தொடர்ந்து உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவினை ஒட்டி தினமும் முருகன் தெய்வானையுடன் கோவில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். தினமும் காலை 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சண்முகர் சன்னதியில் லட்சார்ச்சனையும், யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

thiruparankundram
thiruparankundram

விழாவினையொட்டி சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானை, உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானையும் தினமும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 9ஆம் தேதி மாலை 7 மணி அளவில் கோவர்த்தனாம்பிகையிடம் சூரனை அழிக்க முருகப் பெருமான் வேல் வாங்கும் வைபவம் நடைபெறும். தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்ச்சியாக 10ஆம் தேதி முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளான 21ஆம் தேதி மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனம் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவினையொட்டி மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் காப்புகட்டி ஏழு நாட்களும் தங்கியிருந்து விரதம் இருப்பார்கள்.

விழாவின் நிறைவு நாளில் தங்களது காப்புகளை கழற்றிவிட்டு வீடுகளுக்குச் செல்வார்கள் தற்போதுகொரோனா என்பதால் இந்த ஆண்டு கோவில் விழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும் கந்த சஷ்டி விழா தற்போது பக்தர்கள் கூட்டம் இன்றி குறைவான பக்தர்கள் கொண்டு விழா நடப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories