December 6, 2025, 1:48 AM
26 C
Chennai

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா!

murugan thiruchendur
murugan thiruchendur

திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தற்போது கொரோனா பாதுகாப்பை முன்னிட்டு இந்த ஆண்டு கோவிலில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. ஐப்பசி மாதம் ஏழு நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவினையொட்டி கோவில் விசாக கொறடு மண்டபத்தில் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு கோயில் ஸ்தானிகர் பட்டர்கள் கந்தசஷ்டி காப்பு கட்டினர். தொடர்ந்து உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவினை ஒட்டி தினமும் முருகன் தெய்வானையுடன் கோவில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். தினமும் காலை 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சண்முகர் சன்னதியில் லட்சார்ச்சனையும், யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

thiruparankundram
thiruparankundram

விழாவினையொட்டி சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானை, உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானையும் தினமும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 9ஆம் தேதி மாலை 7 மணி அளவில் கோவர்த்தனாம்பிகையிடம் சூரனை அழிக்க முருகப் பெருமான் வேல் வாங்கும் வைபவம் நடைபெறும். தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்ச்சியாக 10ஆம் தேதி முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளான 21ஆம் தேதி மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனம் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவினையொட்டி மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் காப்புகட்டி ஏழு நாட்களும் தங்கியிருந்து விரதம் இருப்பார்கள்.

விழாவின் நிறைவு நாளில் தங்களது காப்புகளை கழற்றிவிட்டு வீடுகளுக்குச் செல்வார்கள் தற்போதுகொரோனா என்பதால் இந்த ஆண்டு கோவில் விழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும் கந்த சஷ்டி விழா தற்போது பக்தர்கள் கூட்டம் இன்றி குறைவான பக்தர்கள் கொண்டு விழா நடப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories