நாசாவின் எதிர்கால விண்வெளி பயணம்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விமானப்படை டாக்டர் தேர்வு!

Anil Menon - 2026

நாசாவின் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் அமெரிக்க விமானப்படையில் பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டரும் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’ தரப்பிலிருந்து எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதற்கான வின்வெளி வீரர்களை தேர்வு செய்யும் பணி சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு, தங்களை தேர்வு செய்ய வேண்டும் என அமெரிக்காவின் 50 மாகாணங்களை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.

அவர்களில் முதற்கட்டமாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரரும், டாக்டருமான லெப்டினன்ட் கர்னல் அனில் மேனன், 45, என்பவரும் தேர்வாகி இருப்பதாக நாசா அறிவித்து உள்ளது.

விண்வெளிக்கு பயணிக்கும் விமானப்படையை சேர்ந்த முதல் டாக்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாசாவின் ‘ஸ்பேஸ் எக்ஸ் டெமோ- – 2’ பணிகளின்போது, விண்வெளிக்கு ஆட்களை அனுப்புவதில் உதவிய அனில் மேனன், தற்போது அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தவும், விண்வெளியில் மனித குலத்தின் நலனுக்காக பணியாற்றவும் தேர்வாகி இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

புதிதாக தேர்வு செய்யப்பட்டோருக்கான பயிற்சிகளின் தொடக்கவிழா ஹூஸ்டனில் ஜான்சன் விண்வெளி மையம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் அனில் மேனன் உள்ளிட்ட 10 பேரையும் நாசா நிர்வாகி பில் நெல்சன் அறிமுகப்படுத்தினார். அவர் கூறும்போது, ”இவர்கள் ஒவ்வொருவரிடமும் பல்வேறு தனித்துவமான அடையாளங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மறந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டின் லட்சித்திற்காக பாடுபடுவார்கள்,” என்றார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் ஏற்கனவே விண்வெளிக்கு பயணித்து இருந்தனர்.

இந்நிலையில் ஜூலை மாதம் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர் சிரிஷா பண்ட்லா, விண்வெளிக்கு பயணித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்றாவது பெண் என்ற பெருமையை பெற்றார்.

முன்னாள் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா விண்வெளியில் பயணம் செய்த ஒரே இந்திய குடிமகன் ஆவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories