December 6, 2025, 12:02 PM
29 C
Chennai

கொரோனா- நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

madurai collector office - 2025

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஆணையாளர்:

மதுரை மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், உணவு விடுதி, தங்கும் விடுதி, மண்டபம், சந்தை, கேளிக்கை விடுதி, பேருந்துகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்;கடைகள், திருமண மண்டபங்கள் ஆகிய பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது எனவும், வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் வருகை குறித்து தனிப்பதிவேடு பராமரித்து அதில் தடுப்பூசி செலுத்திய விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் வரும் பட்சத்தில் அவர்களை, தடுப்பூசி செலுத்துவதற்கு அறிவுறுத்த வேண்டும்.

தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்த பிறகே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம், சமூக இடைவெளி, ஹேண்ட் வாஷ் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில் 12 சிறப்பு கண்காணிப்பு
க்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் இக்குழு ஆய்வு செய்யும். 17.02.2021 அன்று சுமார் 165 வணிக நிறுவனங்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து மாநகராட்சி கண்காணிப்பு குழுக்களின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்
பட்டது. இதில், வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத சில வணிக நிறுவனங்களுக்கு ரூ.26400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக செலுத்திக் கொள்ளுமாறும், பொது இடங்களில் முகக்கவசம், தனி நபர் இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வணிக நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories