சாலைகளோடு ஹேமமாலினி கன்னங்களை ஒப்பிட்ட அமைச்சர்!

Gulabrov 1 - 2026

ஜல்கோனிலிருக்கும் தனது தொகுதியின் சாலைகள் அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான ஹேமமாலினியின் கன்னங்களைப் போல இருக்கும் என்று மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையாகியுள்ளது.

மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாப்ராவ் பாட்டீல் தான் அந்தச் சர்ச்சை நாயகன். மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதற்காக பாட்டீல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், தன்னுடைய தொகுதியில் போடப்பட்ட சாலைகள் குறித்து பேசினார்.

எதிர்க்கட்சியினரும் மக்களும் தனது தொகுதியில் உள்ள சாலைகளை நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றார். அதோடு விட்டுவிடாமல் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட அவர், நடிகை ஹேமமாலினியின் கன்னம் போல் சும்மா தகதகனு ரோட் எல்லாம் மின்னும் என்றும் கூறினார்.

hema malini - 2026

அப்படி இல்லை என அவர்கள் கருதும் பட்சத்தில் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவதாகவும் ஏடாகூடமாகப் பேசினார்.

அவர் இப்படி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவ நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். சாலையின் தரத்தை வர்ணிக்க ஒரு பெண்ணை தான் ஒப்பிடுவீர்களா என பெண்ணுரிமை பேசுபவர்கள் கேள்வியெழுப்பினர்.

மேலும் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்காவிட்டால், குலாப் ராவ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும் மகாராஷ்டிர பெண்கள் நல ஆணையத்தின் தலைவர் ருபாலி சகான்கர் எச்சரித்தார்.

மகாராஷ்டிர அமைச்சரின் இந்தப் பேச்சு குறித்து கருத்துக் கூறிய பாஜக எம்.பி.யும், நடிகையுமான ஹேம மாலினி, மிகவும் அருவருக்கத்தக்க பேச்சு என்று கூறியுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, லாலு பிரசாத் யாதவ் இதுபோன்றதொரு கருத்தைக் கூறியிருந்தார். இதனைப் பலரும் தொடர்கிறார்கள். யாராக இருந்தாலும், எந்தப் பெண்ணையும் இவ்வாறு சொல்லக் கூடாது என்றார் ஹேம மாலினி.

இதன் எதிரொலியாக தற்போது அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories