ஜிம்பாப்வேயின் டெய்லர் தனது கடைசிப் போட்டியில் அசத்தல் சதம்!

Published:

ஆக்லாந்து: ஜிம்பாப்வேயின் டெய்லர், இந்த முறை இந்தியாவுடனான போட்டியில் அருமையான சதம் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை போட்டியின் 39-வது லீக் சுற்று ஆட்டம் இன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இதில், இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சைத் தேர்வு செய்தது. துவக்கத்தில் பந்துவீச்சில் அசத்தினர் சமி, உமேஷ் யாதவ், மோகித் சர்மா ஆகியோர். இதனால் ஜிம்பாப்வே அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் டெய்லர் வில்லியம்ஸ் இணை சிறப்பாக விளையாடியது. வில்லியம்ஸ் 57 பந்தில் 50 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். டெய்லர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவர் 99 பந்தில் 11 பவுண்டரி, இரண்டு சிக்சருடன் இந்த ரன்னைத் தொட்டார். அவர் 110 பந்துகளில் 5 சிக்ஸர், 15 பவுன்டரிகளுடன் 138 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்கள் அளித்தனர். இது அவருக்கு கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img