லண்டன்: லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை இன்று திறந்து வைக்கிறார் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அந்நாட்டின் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போனை சந்தித்து பேசினார். பின்னர் சனிக்கிழமை இன்று பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் இந்திய தொழில் அதிபர்களை சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையைத் திறந்து வைக்கும் அருண் ஜேட்லி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி இந்தியா திரும்பிய100-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் லண்டன் பார்லிமென்ட் வளாகத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள காந்தியின் வெண்கலச் சிலையைத் திறந்து வைக்கிறார்.
லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை: அருண் ஜேட்லி திறக்கிறார்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

