ஒமிக்ரான்: அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடாதீங்க.. எச்சரிக்கும் நிபுணர்!

omicron - 2026

ஓமிக்ரான் கேஸ்கள் மிக வேகமாக உயர்ந்து வரும் நிலையில் அதை பற்றிய தவறான கண்ணோட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று யு.கே மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்

உலகம் முழுக்க ஓமிக்ரான் கேஸ்கள் காட்டுத்தீ போல பரவி வருகிறது. முதல் இரண்டு அலைகளில் கொரோனா கேஸ்கள் எந்த வேகத்தில் உயர்ந்தது அதை விட மிக அதிக வேகத்தில் ஓமிக்ரான் காரணமாக கேஸ்கள் பரவி வருகிறது.

பல நாடுகளில் ஏற்கனவே 3 அலை ஏற்பட்ட நிலையில் தற்போது 4ம் அலை பரவலை ஓமிக்ரான் ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் தினசரி கொரோனா கேஸ்கள் 10 லட்சத்தை நெருங்கும் அளவிற்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஓமிக்ரான் கேஸ்கள் கொஞ்சம் மைல்ட்டாக இருக்கும் என்ற எண்ணம் உலகம் முழுக்கவே இருக்கிறது.

அதாவது ஓமிக்ரான் வேகமாக பரவினாலும் இதனால் மோசமான பாதிப்பு ஏற்படாது. இதனால் பாதிப்பு என்னவோ மைல்டாகவே இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் காய்ச்சல், சளி போன்ற சாதாரண அறிகுறிகளே ஏற்படுகிறது. இதில் தீவிரமான பாதிப்புகள் எதுவும் இல்லை என்ற கண்ணோட்டம் உலகம் முழுக்க உள்ளது.

இதனால் ஓமிக்ரான் கேஸ்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்த போவது இல்லை என்றே பலரும் நினைத்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் ஓமிக்ரான் கேஸ்கள் குறித்து University of Cambridgeன் மருத்துவ நிபுணரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரவீந்திர குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வைரஸ் கொஞ்சம் வலிமை குறைந்தது என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆனால் ஓமிக்ரான் எந்த வகையிலும் மைல்ட்டாக மாறவில்லை. வைரஸ் என்பது உருமாற்றம் அடைய கூடியது. அது உருமாற்றம் அடையும் போது அதன் பண்புகள் மாறலாம். முக்கியமாக நாம் வேக்சின் உலகத்தில் இருக்கிறோம்.

இதனால் வைரஸ் இதற்கு ஏற்றபடி தனது பயாலஜியை மாற்றிக்கொண்டே இருக்கும். இப்போது ஓமிக்ரான் காரணமாக ஆங்காங்கே வலிமை குறைவான கேஸ்கள் ஏற்படலாம்.

ஆனால் இது இப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்க கூடாது. தீவிரமான கேஸ்கள் வரும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் ஓமிக்ரான் பரவலால் மேலும் சில புதிய வகை கொரோனா தோன்றும் வாய்ப்புகள் உள்ளன.

அந்த உருமாறிய வகை கொரோனா எல்லாம் இதேபோல் ஆற்றல் குறைவாக இருக்கும் என்றும் மட்டும் நினைத்துவிட கூடாது. அது இன்னும் மோசமான பலம் கொண்ட கொரோனாவாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது.

இதை இயற்கை அனுப்பிய வேக்சின் என்றெல்லாம் தப்பு கணக்கு போட கூடாது. ஏனென்றால் இது மேலும் மேலும் அதிகரித்தால் பல புதிய வகை கொரோனா தோன்றும். அவை இன்னும் தீவிர தன்மை கொண்டதாக இருக்கும் அபாயம் உள்ளது.

ஓமிக்ரான் குறித்து இன்னும் முழுமையாக உலகம் அறிந்து கொள்ளவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஓமிக்ரான் ஆபத்து குறைவானது.

இது வேகமாக பரவட்டும், அதனால் மக்களுக்கு எதிர்ப்புசக்தி கிடைக்கும் என்ற தப்பு கணக்கை மட்டும் யாரும் போட்டுவிட வேண்டாம். வேக்சின் மட்டுமே நம்முடைய ஆயுதம். பரவலை முடிந்த அளவு நாம் தடுக்க வேண்டும். அப்போதுதான் புதிய உருமாறிய கொரோனா கேஸ்கள் தோன்றாது, என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories