March 25, 2025, 3:26 PM
32.4 C
Chennai

நிர்வாண படங்கள்.. அக்சய் மாலியால் நிறுத்தப்பட்ட கண்காட்சி!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கலைக்கூடம் ஒன்றால் நடத்தப்பட்ட 3 நாள் கலைக்கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது.

இதில் அக்சய் மாலி என்பவரின் புகைப்படங்கள் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. அதில் நிர்வாணக் கூறுகள் இடம்பெற்றிருப்பதாகச் சொல்லி கண்காட்சி இரண்டாம் நாளான சனிக்கிழமை அன்று நிறுத்தப்பட்டது.

‘இட்ஸ் மீ’ it’s me என்ற தீமில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் கலையின் எல்லைகள் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரபல புகைப்பட கலைஞரான அக்சய் மாலி, தனது புகைப்படங்கள் மூலம் இந்திய அளவில் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறார். பல தீம்களில் இந்தியாவின் பல நாடுகளில் அவர் கண்காட்சிகளை நடத்தி பாராட்டுகளை குவித்து வருகிறார்.

ஆனால் அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவதையும் வழக்கமாக கொண்டவர் இவர்.

இதுகுறித்து கலைக்கூடம் அமைந்துள்ள பாலகந்தர்வ் ரங் மந்திரின் பொறுப்பாளர் சுனில் மேட் கூறுகையில், அக்சய் மாலி அவரது புகைப்படங்கள் குறித்து முன்கூட்டியே நிர்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்.

“பிறரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கும் எந்த ஒரு படைப்பையும் எங்கள் கலைக்கூடம் அனுமதிக்காது. அத்தகைய நிர்வாணம் எங்கள் கலைக்கூடத்தில் இடம்பெறுவது ஏற்புடையதாகவும் இல்லை.

” அந்த புகைப்படங்கள் மற்றும் அதன் தீம் குறித்து அறிந்த உடனே அவற்றை நீக்குமாறு புகைப்படக்கலைஞர் அக்சய் மாலியிடம் கூறப்பட்டது என்றார்.

இச்சம்பவம் குறித்து புகைப்படக்கலைஞர் அக்சய் மாலி கூறுகையில் , “கண்காட்சியில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் இயற்கைச் சூழலில் எடுக்கப்பட்ட பிற மாடல்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. சனிக்கிழமை அன்று கலைக்கூடத்தின் நிர்வாகத்தினர் சிலர் என்னுடைய புகைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவற்றை நீக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்தக் கண்காட்சிக்கு எனது ஸ்லாட்டை புக் செய்தபோது நிர்வாண தீம் குறித்து நான் ஏதும் தெரிவிக்கவில்லை; வெறும் புகைப்படக் கண்காட்சி என்று கூறியே முன்பதிவு செய்தேன்” என்றார்.

இதற்கு முன் ஆன்லைன் கண்காட்சிகளில் மட்டுமே வெளியாகி இருந்த எனது புகைப்படங்கள் ஒரு கலைக்கூட கண்காட்சியில் இடம் பெறுவது இதுவே முதன்முறை எனவும், முதல் வெளியீட்டிலேயே எனது படைப்புகள் இத்தகைய எதிர்ப்பைச் சந்தித்திருப்பதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், கலைக்கு எந்த விதிகளும் எல்லைகளும் இல்லை; ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் அடைத்து வைக்கும் முயற்சி இங்கே நடந்துள்ளதாகவும் அக்சய் மாலி கூறியுள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

Topics

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

Entertainment News

Popular Categories