தன் கூட்டம் சாலையைக் கடக்க.. ரூட் கிளியர் செய்த யானை!

Published:

elephant 4 - 2026

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் விலங்குகளின் சுவாரசிய வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அவ்விதம் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையவாசிகள் இடையே வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் யானை ஒன்று சாலையில் உள்ள வாகனங்களை தடுத்து நிறுத்துகிறது. மிகவும் கம்பீரமாக ஓடி வந்து சைக்கிளில் செல்பவரை விரைவாக செல்லும் படி துரத்துகிறது.

யானையின் செயலை கண்டு பின்னர் வரும் வாகனங்கள் அஞ்சி நடுங்கி பின்னரே நிற்கின்றனர். அதன்பின் குரலொலி எழுப்பி பிற யானை கூட்டங்களை அழைக்கின்றது. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதேபோன்று மற்றொரு வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில் நாய் ஒன்று ஓடும் நீரில் செய்வதறியாது நிற்கின்றது. செல்வதற்கு வழி தெரியாது கத்தி கொண்டு அங்குமிங்கும் பார்த்தபடி இருக்க அருகில் வந்த பெண் ஒருவர் நாயினை அரவணைத்த படி நாயினை தடவி கொடுக்கின்றார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இந்த வீடியோவை 1 லட்சம் மக்கள் இதுவரை ரீட்வீட் செய்துள்ளனர். 8.4 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 83 பேர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img