எச்சரிக்கை: குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால்..!

baby 6 - 2026

உலகெங்கும் கொரோனா தொற்று பரவல் தொடங்கி சுமார் 2 அண்டுகள் ஆன நிலையிலும், இன்னும், கொரோன தொற்று பரவல் ஓயவில்லை.

அதிலும் புதிதாக தோன்றியுள்ள ஒமிக்ரான் திரிபு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளிடமும் கொரோனா தொற்றுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சில அறிகுறிகள் காணப்படும் நிலையில், குழந்தைகளிடம் நரம்பியல் தொடர்பான அறிகுறிகள் தென்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 44 சதவீத குழந்தைகளிடம், கோவிட் நோய்த் தொற்றின் நரம்பியல் அறிகுறிகள் காணப்பட்டதாகவும் ( Neurological Symptoms of covid infection) , இந்த குழந்தைகளுக்கு மற்ற நோயாளிகளை விட அதிக கவனிப்பு தேவைப்பட்டதாகவும், கூறப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் பீடியாட்ரிக் நியூராலஜி இதழில் (Journal Pediatric Neurology) வெளியிடப்பட்டுள்ளன.

இது Acute Encephalopathy என்று அழைக்கப்படுகிறது. 15 மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கிவிட்டது. ஆனால் இதற்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில், கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் அவற்றைப் புறக்கணிக்காதீர்கள்.

காய்ச்சலுடன் தலைவலி:

குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி இருந்தால், கோவிட் பரிசோதனையை கூடிய விரைவில் செய்ய வேண்டியது அவசியம். கொரோனா பாதித்த நோயாளிகள் தலையின் பின்பகுதியில் வலி இருப்பதாக புகார் கூறுவது தெரிய வந்துள்ளது.

மூக்கு ஒழுகுதல், வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி:

குழந்தைக்கு சளி, வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தாலும், அதைப் புறக்கணிக்காதீர்கள். இது கோவிட் நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஆன்லைனில் மருத்துவரை அணுகி விரைவில் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

காய்ச்சல் மற்றும் உடல் வலி:

குழந்தைகளிடம் காணப்படும் கோவிட்-19 இன் அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும். குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்தால், கவனமாக இருங்கள். அது கொரோனா தொற்றாக இருக்கலாம். எனவே, சாதாரண காய்ச்சலாகக் கருதி, மருந்துகளை உண்ணக் கூடாது. மருத்துவரை அணுகி அவருடைய பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories