December 6, 2025, 8:23 PM
26.8 C
Chennai

ஓய்வு பெற்ற அதிகாரிக்கு பிரியா விடை கொடுத்த இராணுவ வீரர்கள்! வைரல்!

military - 2025

இந்திய ராணுவ அதிகாரி ஜீத் தில்லானுக்கு சக ஊழியர்களின் பிரியாவிடை, மனதைக் கவரும் வகையில் வைரலாகி வருகிறது

பணி ஓய்வு பெறும் லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் சிங் ஜீத் தில்லானுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் இதயம் கனிந்த பிரியாவிடை அளித்தனர்

வைரலாகும் இந்த மிலிட்ரி வீடியோவில், லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் சிங் ஜீத் தில்லான் ராணுவ பாரம்பரியத்துடன் பிரியாவிடை கொடுத்து அனுப்புவது பதிவாகியுள்ளது.

பிடித்தமான எந்த செயலுக்கும் இறுதி என்ற ஒன்று உண்டு என்பதுபோல, எவ்வளவுதான் பிடித்தமாக வேலை செய்தாலும், குறிப்பிட்ட வயதில் பணி ஓய்வு பெற வேண்டிய மரபு ராணுவத்தில் கட்டாயமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஒரு நபரின் வாழ்க்கையில் பணியில் இருந்து ஓய்வு பெறுவது என்பது ஒரு முக்கியமான மைல்கல் என்பதால் அது கொண்டாடப்பட வேண்டும்.

கட்டுப்பாட்டுடன் கொண்டாடப்படும் இந்த பணி ஓய்வு பிரியாவிடை வீடியோவில், இந்திய ராணுவ அதிகாரிகள் தங்கள் சக ஊழியருக்கு ராணுவ மரப்புபடி அற்புதமான பிரியாவிடை வழங்குவதைக் காணலாம்.

சக ஊழியர்கள் அவரை நாற்காலியில் அமர வைத்து, ‘ஜாலி குட் ஃபெலோ’ என்று பாடினார்கள். லெப்டினன்ட் ஜெனரல் தில்லானும் உடன் சென்று, கைதட்டி, எல்லோருடனும் சேர்ந்து பாடலைப் பாடுகிறார்.

பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரலாகவும், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் (உளவுத்துறை) துணைத் தலைவராகவும் பணியாற்றிய ஜெனரல் தில்லானின், ராணுவப் பணியின் கடைசி நாளன்று இந்த பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.

சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகும் வீடியோவில் பலரும் கருத்திட்டுள்ளனர்.

நாட்டுக்கு சேவையாற்றிய அவருக்கு மக்கள் நன்றி தெரிவித்து நன்றி தெரிவித்தனர். “நன்றி ஐயா. உங்களைப் போன்றவர்களால் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். பணி ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். உங்கள் இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.” என்று ஒரு பயனர் எழுதியுள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் தில்லான், ‘டைனி தில்லான்’ என்று பிரபலமாக அறியப்பட்டவர், 1983 டிசம்பரில் ராணுவத்தில் சேர்ந்த அவர், காஷ்மீரை தளமாகக் கொண்ட XV கார்ப்ஸின் (Kashmir-based XV Corps) தலைவராக இருந்தபோது, ​​ஆபரேஷன் மா என்ற திட்டத்தைத் தொடங்கியதற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.

குறிப்பாக தீவிரவாதத்தில் இணைந்த இளைஞர்களின் குடும்பங்களை அணுகி, தங்கள் குழந்தைகளை தேசிய நீரோட்டத்திற்கு திரும்பக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார் என்பதால் பலராலும் பாரட்டப்பட்டவர் லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் தில்லான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories