சிறுவர்கள் நடத்தும் உணவகம்..! ஆனந்த் மஹிந்த்ராவின் உருக்கமான ட்விட்!

amirthasars - 2026

சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவற்றில் சிறந்த பதிவுகளை ரீட்வீட் செய்கிறார்.

அனைவரும் பார்க்க விரும்பும் அவரது பதிவுகளில் இந்த வீடியோ கண்களில் நீரை வரவழைக்கிறது.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்ட வீடியோ உணர்ச்சிகரமானது என்றாலும் பெரியவர்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் வீடியோ.

இந்த வீடியோவைப் பார்த்த ஆனந்த் மஹிந்திராவின் இதயம் உருகியது, மேலும் அமிர்தசரஸ் வரும்போதெல்லாம், கண்டிப்பாக இந்த குழந்தைகள் நடத்தும் உணவகத்திற்குச் செல்வதாகவும், அனைவரும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாக கேட்டுக் கொண்டார்.

restaurant - 2026

கடந்த வியாழக்கிழமை, அமிர்தசரஸ் வாக்கிங் டூர்ஸ் என்ற யூடியூப் சேனலில் ஒரு வீடியோ பதிவேற்றப்பட்டது. அமிர்தசரஸில் டாப் கிரில் என்ற உணவகத்தை நடத்தி வரும் 17 வயது ஜஷந்தீப் சிங் மற்றும் 11 வயது அன்ஷ்தீப் சிங் ஆகியோரின் கதையை இந்த வீடியோ சொல்கிறது.

இந்த இரண்டு குழந்தைகள் தங்கள் தந்தையின் உணவகத்தை நடத்துகிறார்கள். இரண்டு குழந்தைகளின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த உணவகத்தைத் தொடங்கினார்.

ஆனால் அவர் 26 டிசம்பர் 2021 அன்று இறந்தார். தற்போது குழந்தைகள் இருவரும் சேர்ந்து உணவகம் நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தின் மொத்த சுமையையும் தங்கள் தோளில் சுமக்கும் இந்த சிறுவர்கள், வாடகை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

வீடியோவின் முடிவில், இந்த உணவகத்திற்கு வருமாறு சிறுவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.

11 வயது சிறுவனின் குரலைக் கேட்ட ஆனந்த் மஹிந்திரா மனதைத் தொடும் இந்த வீடியோவை பகிர்ந்து, ‘இந்தக் குழந்தைகள் நான் பார்த்த புத்திசாலி மனிதர்களில் முக்கியமானவர்கள்.

நான் அநத ஹோட்டலின் வாடிக்கையாளர்களின் வரிசையில் இருப்பேன் ‘.

எனக்கு அமிர்தசரஸ் மிகவும் பிடிக்கும், மேலும் உலகின் சுவையான ஜிலேபியை சாப்பிடுவதற்காக அடிக்கடி இந்த நகரத்திற்கு செல்வேன்,

இப்போது இந்த உணவகமும் எனது பட்டியலில் சேர்ந்துவிட்டது. அடுத்த முறை இந்த நகரத்திற்கு வரும்போது இங்கு கண்டிப்பாக சாப்பிடுவேன் ‘ என்று பதிவிட்டுள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

இந்த வீடியோவை இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். இந்த சிறுவர்கள் இருவரும் தினசரி 25 கிலோமீட்டர் பயணித்து வந்து கடையை நடத்துகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories