8 மாத குழந்தையின் உணவுக் குழாயில் ஊக்குப்பின்.. அதோடு கோவிட்.. காப்பாற்றிய மருத்துவர்கள்!

- 2026

கேரளாவின் மண்ணுத்தி பகுதியில் உள்ள வல்லச்சிரவீட்டில் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத், தீபா தம்பதி.
அவர்களது 8 மாத ஆண் குழந்தையை உடல்நலக் குறைவு காரணமாக திருச்சூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜனவரி 19ம் தேதி அனுமதித்தனர்.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதே குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்திருக்கிறான். இதனால் செயற்கை சுவாசக் கருவி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.

அப்போது குழந்தையின் மூளையில் சீழ் இருப்பதும், கோவிட் தொற்றும் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதோடு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் மூளையில் இருந்த சீழ்-உம் அகற்றப்பட்டிருக்கிறது.

இருப்பினும் குழந்தையின் உடல்நிலையின் முன்னேற்றம் காணப்படாததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உணவுக்குழாயை ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள்.

அப்போது, உணவுக் குழாயில் Safety pin என அழைக்கக் கூடிய ஊக்கு சிக்கியிருந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

பின்னர் உணவுக்குழாயில் உள்ள ஊக்கினை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தியதை அடுத்து குழந்தைகள் நல வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறது அந்த சிசு.

பத்து நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்புக்கு பிறகு குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

நரம்பியல் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் பலர் இணைந்து 8 மாத குழந்தையை உயிர் பிழைக்க வைத்ததற்கு திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் குழுவுக்கு பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories