March 25, 2025, 3:32 PM
32.2 C
Chennai

தண்ணீர் கேனுக்குள் தலையை விட்டு தவித்த சிறுத்தைக்குட்டி!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பிளாஸ்டிக் தண்ணீர் கேனுக்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்ட சிறுத்தை குட்டியை தன்னார்வலர்கள் குழு பத்திரமாக மீட்ட சம்பவம் சோசியல் மீடியாவில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் சிறுத்தை குட்டி ஒன்றின் தலை பிளாஸ்டிக் தண்ணீர் கேனுக்குள் சிக்கிகொண்டது. அதிலிருந்து தலையை வெளியே எடுக்க முடியாமல் 48 மணி நேரம் சிறுத்தை பெரும் போராட்டத்தை சந்தித்துள்ளது.

சிறுத்தையின் நிலையை பார்த்து நொந்துபோன நபர் ஒருவர் அதனை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர, அது வைரலாகியுள்ளது.

தண்ணீர் கேனுக்குள் தலையை விட்டு சிக்கிக் கொண்டதால், செய்வதறியாது தவித்த சிறுத்தை வனப்பகுதியில் அங்கும், இங்குமாக சுற்றித் திரியும் வீடியோவை பார்த்து மக்கள் வேதனையடைந்தனர்.

அந்த வீடியோ மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வனத்துறையினர், தன்னார்வலர்கள், கிராம மக்கள் ஆகியோர் அடங்கிய குழு, சிறுத்தையை பிளாஸ்டிக் கேனுக்குள் இருந்து விடுவிக்கும் பணியில் இறங்கினர்.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனமான ரெஸ்கிங்க் அசோசியேஷன் ஃபார் வைல்டு லைஃப் வெல்ஃபேர் (RAWW) ட்விட்டரில், “பிளாஸ்டிக் கொள்கலனில் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று, தானேவில் உள்ள மஹா வனத்தில் உள்ள பத்லாபூரில் காணப்பட்டதாகவும், அதனை மீட்புக் குழுக்கள் கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாகவும்” பகிர்ந்திருந்தனர்.

அதன் பின்னர் மீட்புகுழுவினர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். கிராம மக்கள், வனத்துறையினர் உதவியுடன் நடத்தப்பட்ட தேடலின் முடிவாக, கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக சரியாக சுவாசிக்கவோ, சாப்பிடவோ, குடிக்கவோ முடியாமல் மிகவும் சோர்ந்து போனா நிலையில் சிறுத்தை குட்டியை கண்டறிந்தனர்.

மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தையின் தலையில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் கேன் பத்திரமாக நீக்கப்பட்டது.
பின்னர் ரெஸ்கிங்க் அசோசியேஷன் ஃபார் வைல்டு லைஃப் வெல்ஃபேர் பதிவிட்ட ட்வீட்டில் சிறுத்தை பத்திரமாக மீட்பட்டதையும், அது தலையில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் கேன் நீக்கப்பட்டதையும் தெரிவித்திருந்தனர்.

மேலும் அடுத்த 24 முதல் 48 மணி நேரம் வரை சிறுத்தை குட்டி கண்காணிப்பில் வைக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து RAWW மீட்புக்குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. “நல்ல வேலை!! மிகவும் பாராட்டத்தக்கது”, “மிக அருமையான செயல்.. கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பாராக”, “ஹீரோஸ்,” என மீட்பு குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

மற்றொருபுறம் சிறுத்தைக்கு தீமை இழைத்தவர்களை வசைபாடியும் உணர்ச்சிப்பூர்வமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

Topics

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

Entertainment News

Popular Categories