பிராமணர் கூட்டு இல்லாமல் திமுகவிற்கு அரசியலே இல்லை: திமுக நிர்வாகிக்கு கஸ்தூரி பதிலடி!

Published:

kasthuri - 2026

நடிகை கஸ்தூரி தள்ளாத வயதில் திருமணம் செய்து வாரிசு தேடியவர் வழிவந்தவர்கள் மற்ற இயக்கங்களை பற்றி பேசலாமா என ட்விட்டரில் பதிலளித்து உள்ளார்

திமுக தரப்பினருக்கு எதிராக, ‘பிராமணர் கூட்டு இல்லாமல், திமுகவுக்கு அரசியலே இல்லை’ என்று குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்த ட்விட்டர் பதிவு வைரலாகியுள்ளது.

இந்நிலையில், கஸ்தூரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் நெட்டிசன்கள் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.

திமுக செய்தித்தொடர்பாளரான சரவணன் அண்ணாதுரை, “வாரிசு அரசியல் என கூக்குரலிடும் எவரும், ஆர்.எஸ்.எஸ். தலைவராக பிராமணர் அல்லாதோர் வரமுடியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முன்வருவதில்லை.” என வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் கஸ்தூரி இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

கஸ்தூரி வெளியிட்டிருந்த பதிவில், ” When DMK runs out of steam, they play the brahmin card. தள்ளாத வயதில் திருமணம் செய்து வாரிசு தேடியவர் வழிவந்தவர்கள் பேசலாமா மற்ற இயக்கங்களை பற்றி.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

ராஜாஜி தொடங்கி மம்தா, ராகுல், பிரசாந்த் கிஷோர் வரை பிராமணர் கூட்டு இல்லாமல் அரசியலே இல்லையே திமுகவிற்கு, அதை பேசுவீர்களா?” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு ஒருவர் இடியட் என்று எதிர்வினையாற்ற, அதற்கு, ”இது வரலாறு, மிஸ்டர் இடியட். உங்கள் பதிவை உங்கள் பெயரில் பதிவிட்டமைக்கு நன்றி மிஸ்டர் இடியட்” என்று பதில் கூறியுள்ளார்.

இந்நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம் என்று ஒருவர் பதிவிட, அதற்கு, இது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியது அல்ல என்றும், குடும்ப உறுப்பினர்களை மட்டுமே அரசியல் வாரிசாகக் கருதும் நிர்ப்பந்தம் பெரியாரிடம் இருந்து, அது எவ்வளவு சரி என்று தான் பேசுவதாகவும், பெரியார் உண்மையில் மணியம்மையை, தன் வாரிசாகக் கொள்ளவதற்காகவே திருமணம் செய்துகொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img