9 வயது சிறுவன் யோகா மாஸ்டர்! கின்னஸ் சாதனை!

yoga - 2026

இந்தியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் இளம் வயதிலேயே பயிற்சி பெற்ற யோகா மாஸ்டரானது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

உடல், மனம், ஆன்மா, உணர்ச்சிகள் என அனைத்தையும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கும் கலையாக ‘யோகா’ உள்ளது.

இந்தியாவில் இதனைக் கற்றுக்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர்.

இன்றைய பிசி லைஃப் ஸ்டைலில் மன அமைதிக்கு யோகா மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

4 வயது சிறுவர்கள் முதல் 95 வயது பாட்டி வரை யோகாவில் விதவிதமாய் பல்வேறு சாதனைகளை படைத்தவர்களைப் பார்த்திருப்போம்.

அந்த சாதனைப் பட்டியலில் தற்போது புதிதாக சேர்ந்திருக்கு பெயர் 9 வயது சிறுவனான ரேயான்ஷ் சுரானி.

துபாயில் வசித்து வரும் இந்திய தம்பதியின் மகன் ரேயான்ஷ் சுரானி. இவர்களது பெற்றோர் தினந்தோறும் வீட்டிலேயே யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதனை ரேயான்ஷ் சுரானி, குழந்தையான இருக்கும் போதில் இருந்தே பார்த்து வந்ததால், அதன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. 4 வயதில் இருந்தே யோகா பயிற்சி பெற்றுவருகிறார்.

அப்போது தான் தனது பெற்றோர் மூலமாக இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஆனந்த் சேகர் யோகா பள்ளியில் 200 மணி நேர யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடைபெறுவதை ரேயான்ஷ் அறிந்து கொண்டார்.

யோகா பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், ரேயான்ஷை அந்த பயிற்சி வகுப்பில் சேர உந்தித் தள்ளியது.

பெற்றோர் சம்மதத்துடன் யோகா ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்த ரேயான்ஷ், தீவிரமாக பயிற்சி பெற்று யோகாவை பிறருக்கு கற்றுக்கொடுப்பது எப்படி என்பதை நன்கு கற்றறிந்த பயிற்சியாளராக மாறியுள்ளார்.

இதனையடுத்து, 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி ஆனந்த் சேகர் யோகா பள்ளியிலிருந்து 200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்.

உலகிலேயே 9 வயதில் யோகா ஆசிரியர் பட்டம் பெற்ற முதல் சிறுவன் ரேயான்ஷ் சுரானி ஆவார்.

இதுகுறித்து தகவலறிந்த கின்னஸ் புத்தக நிர்வாகிகள், அவரை தொடர்புகொண்டு அவரது சான்றிதழ்களை உறுதி செய்தனர்.

இதையடுத்து, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உலகிலேயே இளம் வயது யோகா ஆசிரியராக ரேயான்ஷ் சுரானியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ரேயான்ஷ் உடலை வளைத்து பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டி அசத்தியுள்ளார்.

200 மணி நேரப் பயிற்சி குறித்து ரேயான்ஷ் சுரானி கூறுகையில்,
“தனக்கு பாடநெறி சீரமைப்பு, உடற்கூறியல் தத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தின் ஊட்டச்சத்து உண்மைகளை கற்பித்தது. ஆரம்பத்தில் நான் யோகா என்பது உடல் நிலை மற்றும் சுவாசம் பற்றியது மட்டுமே என நினைத்தேன். ஆனால் அது அதை விட அதிகம் என்பதை இப்போது புரிந்துகொண்டேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிப்பட்ட இளம் யோகா பயிற்சியாளரான ரேயான்ஷ், தற்போது சிறிய அளவிலான தனியார் யோகா வகுப்புகளை நடத்தி வருகிறார். தனது பள்ளியில் படிக்கும் 10 முதல் 15 மாணவர்களைக் கொண்ட குழுவிற்கு யோகா கற்றுக்கொடுக்கிறார்.

யோகா பயிற்சியாளராக இருப்பது குறித்த எவ்வித எதிர்காலத் திட்டமும் தன்னிடம் இல்லை எனத் தெரிவிக்கும் ரேயான்ஷ், யோகா கற்பிப்பது தனக்கு திருப்தி மற்றும் சாதனை உணர்வைத் தருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது 9 வயதிலேயே அங்கீகரிப்பட்ட இளம் யோகா பயிற்சியாளர் என்ற சாதனை படைத்து ரேயான்ஷ் சுரானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories