9 வயது சிறுவன் யோகா மாஸ்டர்! கின்னஸ் சாதனை!

yoga - 2026

இந்தியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் இளம் வயதிலேயே பயிற்சி பெற்ற யோகா மாஸ்டரானது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

உடல், மனம், ஆன்மா, உணர்ச்சிகள் என அனைத்தையும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கும் கலையாக ‘யோகா’ உள்ளது.

இந்தியாவில் இதனைக் கற்றுக்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர்.

இன்றைய பிசி லைஃப் ஸ்டைலில் மன அமைதிக்கு யோகா மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

4 வயது சிறுவர்கள் முதல் 95 வயது பாட்டி வரை யோகாவில் விதவிதமாய் பல்வேறு சாதனைகளை படைத்தவர்களைப் பார்த்திருப்போம்.

அந்த சாதனைப் பட்டியலில் தற்போது புதிதாக சேர்ந்திருக்கு பெயர் 9 வயது சிறுவனான ரேயான்ஷ் சுரானி.

துபாயில் வசித்து வரும் இந்திய தம்பதியின் மகன் ரேயான்ஷ் சுரானி. இவர்களது பெற்றோர் தினந்தோறும் வீட்டிலேயே யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதனை ரேயான்ஷ் சுரானி, குழந்தையான இருக்கும் போதில் இருந்தே பார்த்து வந்ததால், அதன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. 4 வயதில் இருந்தே யோகா பயிற்சி பெற்றுவருகிறார்.

அப்போது தான் தனது பெற்றோர் மூலமாக இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஆனந்த் சேகர் யோகா பள்ளியில் 200 மணி நேர யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடைபெறுவதை ரேயான்ஷ் அறிந்து கொண்டார்.

யோகா பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், ரேயான்ஷை அந்த பயிற்சி வகுப்பில் சேர உந்தித் தள்ளியது.

பெற்றோர் சம்மதத்துடன் யோகா ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்த ரேயான்ஷ், தீவிரமாக பயிற்சி பெற்று யோகாவை பிறருக்கு கற்றுக்கொடுப்பது எப்படி என்பதை நன்கு கற்றறிந்த பயிற்சியாளராக மாறியுள்ளார்.

இதனையடுத்து, 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி ஆனந்த் சேகர் யோகா பள்ளியிலிருந்து 200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்.

உலகிலேயே 9 வயதில் யோகா ஆசிரியர் பட்டம் பெற்ற முதல் சிறுவன் ரேயான்ஷ் சுரானி ஆவார்.

இதுகுறித்து தகவலறிந்த கின்னஸ் புத்தக நிர்வாகிகள், அவரை தொடர்புகொண்டு அவரது சான்றிதழ்களை உறுதி செய்தனர்.

இதையடுத்து, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உலகிலேயே இளம் வயது யோகா ஆசிரியராக ரேயான்ஷ் சுரானியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ரேயான்ஷ் உடலை வளைத்து பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டி அசத்தியுள்ளார்.

200 மணி நேரப் பயிற்சி குறித்து ரேயான்ஷ் சுரானி கூறுகையில்,
“தனக்கு பாடநெறி சீரமைப்பு, உடற்கூறியல் தத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தின் ஊட்டச்சத்து உண்மைகளை கற்பித்தது. ஆரம்பத்தில் நான் யோகா என்பது உடல் நிலை மற்றும் சுவாசம் பற்றியது மட்டுமே என நினைத்தேன். ஆனால் அது அதை விட அதிகம் என்பதை இப்போது புரிந்துகொண்டேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிப்பட்ட இளம் யோகா பயிற்சியாளரான ரேயான்ஷ், தற்போது சிறிய அளவிலான தனியார் யோகா வகுப்புகளை நடத்தி வருகிறார். தனது பள்ளியில் படிக்கும் 10 முதல் 15 மாணவர்களைக் கொண்ட குழுவிற்கு யோகா கற்றுக்கொடுக்கிறார்.

யோகா பயிற்சியாளராக இருப்பது குறித்த எவ்வித எதிர்காலத் திட்டமும் தன்னிடம் இல்லை எனத் தெரிவிக்கும் ரேயான்ஷ், யோகா கற்பிப்பது தனக்கு திருப்தி மற்றும் சாதனை உணர்வைத் தருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது 9 வயதிலேயே அங்கீகரிப்பட்ட இளம் யோகா பயிற்சியாளர் என்ற சாதனை படைத்து ரேயான்ஷ் சுரானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories