9 வயது சிறுவன் யோகா மாஸ்டர்! கின்னஸ் சாதனை!

yoga - 2026

இந்தியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் இளம் வயதிலேயே பயிற்சி பெற்ற யோகா மாஸ்டரானது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

உடல், மனம், ஆன்மா, உணர்ச்சிகள் என அனைத்தையும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கும் கலையாக ‘யோகா’ உள்ளது.

இந்தியாவில் இதனைக் கற்றுக்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர்.

இன்றைய பிசி லைஃப் ஸ்டைலில் மன அமைதிக்கு யோகா மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

4 வயது சிறுவர்கள் முதல் 95 வயது பாட்டி வரை யோகாவில் விதவிதமாய் பல்வேறு சாதனைகளை படைத்தவர்களைப் பார்த்திருப்போம்.

அந்த சாதனைப் பட்டியலில் தற்போது புதிதாக சேர்ந்திருக்கு பெயர் 9 வயது சிறுவனான ரேயான்ஷ் சுரானி.

துபாயில் வசித்து வரும் இந்திய தம்பதியின் மகன் ரேயான்ஷ் சுரானி. இவர்களது பெற்றோர் தினந்தோறும் வீட்டிலேயே யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதனை ரேயான்ஷ் சுரானி, குழந்தையான இருக்கும் போதில் இருந்தே பார்த்து வந்ததால், அதன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. 4 வயதில் இருந்தே யோகா பயிற்சி பெற்றுவருகிறார்.

அப்போது தான் தனது பெற்றோர் மூலமாக இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஆனந்த் சேகர் யோகா பள்ளியில் 200 மணி நேர யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடைபெறுவதை ரேயான்ஷ் அறிந்து கொண்டார்.

யோகா பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், ரேயான்ஷை அந்த பயிற்சி வகுப்பில் சேர உந்தித் தள்ளியது.

பெற்றோர் சம்மதத்துடன் யோகா ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்த ரேயான்ஷ், தீவிரமாக பயிற்சி பெற்று யோகாவை பிறருக்கு கற்றுக்கொடுப்பது எப்படி என்பதை நன்கு கற்றறிந்த பயிற்சியாளராக மாறியுள்ளார்.

இதனையடுத்து, 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி ஆனந்த் சேகர் யோகா பள்ளியிலிருந்து 200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்.

உலகிலேயே 9 வயதில் யோகா ஆசிரியர் பட்டம் பெற்ற முதல் சிறுவன் ரேயான்ஷ் சுரானி ஆவார்.

இதுகுறித்து தகவலறிந்த கின்னஸ் புத்தக நிர்வாகிகள், அவரை தொடர்புகொண்டு அவரது சான்றிதழ்களை உறுதி செய்தனர்.

இதையடுத்து, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உலகிலேயே இளம் வயது யோகா ஆசிரியராக ரேயான்ஷ் சுரானியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ரேயான்ஷ் உடலை வளைத்து பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டி அசத்தியுள்ளார்.

200 மணி நேரப் பயிற்சி குறித்து ரேயான்ஷ் சுரானி கூறுகையில்,
“தனக்கு பாடநெறி சீரமைப்பு, உடற்கூறியல் தத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தின் ஊட்டச்சத்து உண்மைகளை கற்பித்தது. ஆரம்பத்தில் நான் யோகா என்பது உடல் நிலை மற்றும் சுவாசம் பற்றியது மட்டுமே என நினைத்தேன். ஆனால் அது அதை விட அதிகம் என்பதை இப்போது புரிந்துகொண்டேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிப்பட்ட இளம் யோகா பயிற்சியாளரான ரேயான்ஷ், தற்போது சிறிய அளவிலான தனியார் யோகா வகுப்புகளை நடத்தி வருகிறார். தனது பள்ளியில் படிக்கும் 10 முதல் 15 மாணவர்களைக் கொண்ட குழுவிற்கு யோகா கற்றுக்கொடுக்கிறார்.

யோகா பயிற்சியாளராக இருப்பது குறித்த எவ்வித எதிர்காலத் திட்டமும் தன்னிடம் இல்லை எனத் தெரிவிக்கும் ரேயான்ஷ், யோகா கற்பிப்பது தனக்கு திருப்தி மற்றும் சாதனை உணர்வைத் தருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது 9 வயதிலேயே அங்கீகரிப்பட்ட இளம் யோகா பயிற்சியாளர் என்ற சாதனை படைத்து ரேயான்ஷ் சுரானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

Topics

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

Entertainment News

Popular Categories