ராஜபாளையம் வழியாக இயக்கப்படும் கொல்லம், செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை, கொல்லம் விரைவு இரயில்களில் மீண்டும் முன்பதிவற்ற பொதுப் பெட்டிகளாக இயக்கப்படவுள்ளது.
விபரங்கள் பின்வருமாறு…
பொதிகை அதிவிரைவு வண்டி(12661/12662):
21-மார்ச்-22 முதல் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும்.
சிலம்பு விரைவு வண்டி(16181/16182):
12-மார்ச்-22 முதல் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும்.
கொல்லம் மெயில் விரைவு வண்டி:
வண்டி எண்: 16101,12-மார்ச்-22 முதலும்,
வண்டி எண்: 16102, 13-மார்ச்-22 முதலும் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும். என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுபோல் இந்த வழியில் இயங்கிய செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில்,
செங்கோட்டை-ராஜபாளையம் வழி இயங்கிய
எர்ணாகுளம்–வேளாங்கண்ணி-எர்ணாகுளம்
விரைவுரயிலை மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் புனலூர்-குருவாயூர் -புனலூர் ரயிலை செங்கோட்டை ராஜபாளையம் வழி மதுரை வரை நீட்டித்தது இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் செங்கோட்டை -தாம்பரம் இடையே இயக்குவதாக அறிவித்த அந்தியோதயா , தென்காசி வழி திருநெல்வேலி-தாம்பரம் இடையே இயக்குவதாக இருந்த விரைவு ரயிலை உடன் இயக்கவும் சிலம்பு விரைவுரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.





