இந்தியா- இலங்கை இடையே இயங்கிய போட்மெயிலுக்கு வயது108-

இந்திய ரயில்வே வரலாற்றில் போட்மெயில்(Boatmail) ரயில் மிக பிரபலமான ரயிலாகும்.போட்மெயில்   தனது 108வது வயதில் அடியெடுத்து வைத்து சேவையை தொடர்கிறது.

சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் இடையே புதுக்கோட்டை வழியாக செல்லும் 16851/52 போட்மெயில் ரயில்  24/02/22 108 வது  பிறந்தநாளை சலனமின்றி கொண்டாடியது.

இந்த போட்மெயில் ரயிலின் வரலாறே சுவராஸ்யமான ஒன்றாகும்.கடந்த 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சென்னை எழும்பூர்- கொழும்பு இடையே #போட்மெயில்(Boatmail) ரயில் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை எழும்பூர்-தனுஷ்கோடி வரை ரயிலிலும், தனுஷ்கோடி-தலைமன்னார் வரை படகிலும் பிறகு தலைமன்னார்-கொழும்பு வரை ரயிலிலும் இயங்கிவந்துள்ளது. பகுதி ரயில் பகுதி படகில் பயணிப்பதாலேயே இந்த ரயிலுக்கு போட்மெயில்(Boatmail) என்று பெயர் வந்தது. மேலும் இந்தியாவையும் சிலோனையும் இணைத்ததால் இந்த ரயில் ‘இந்தோ-சிலோன் போட்மெயில்’ என்றே அன்றைய காலகட்டத்தில் மக்களால் அழைக்கப்பட்டது. சென்னையிலிருந்து சிலோனுக்கு வெறும் ரூ80  கட்டணத்தில் அன்றைய மக்கள் இந்த ரயிலில் பணித்துள்ளனர்.  இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஏறக்குறைய 50 ஆண்டுகள் வரை இந்தியா/இலங்கை மக்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வந்தாக வரலாறு கூறுகிறது.

22 டிசம்பர் 1964 ஆம் ஆண்டு தனுக்கோடியை தாக்கிய புயலின் போது 100 க்கு மேற்பட்ட பயணிகளுடன் பாம்பனிலிருந்து புறப்பட்ட பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயில் புயலில்  சிக்கியது. பல ரயில் பெட்டிகள் கடலில் மூழ்கின. அதன் பிறகு தனுஷ்கோடி-பாம்பன் பாதை துண்டிக்கப்பட்டது.அதிலிருந்து  போட்மெயில் ரயில் ராமேஸ்வரம் வரை  மட்டுமே இயக்கப்பட்டுவருகிறது.

தனுஷ்கோடி-ராமேஸ்வரம் இடையே 17.2கிமீ தூரம் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த பாதை அமைக்கப்பட்டபின் போட்மெயில் ரயில் தனது பழைய நிலைக்கு திரும்பும் நாளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

IMG 20220225 113636 - 2026
IMG 20220225 113707 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories