அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூன்றாவது முறையாக கைது:

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மூன்றாவது வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக நிர்வாகி நரேஷை தாக்கியது, சாலை மறியலில் ஈடுபட்டது என இரு வழக்குகளை தண்டையார்பேட்டை, ராயபுரம் போலீஸார் ஜெயக்குமார் மீது பதிவு செய்து, கடந்த 21-ஆம் தேதி கைது செய்தனர். இந்தநிலையில் தற்போது மூன்றாவது வழக்கில் டி.ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.இச்சம்பவம் அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விரிவான விபரம் –

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலை அண்மையில் சந்தித்து ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவை எனது சகோதரர் நவீன்குமார் திருமணம் செய்துள்ளார். நான், மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலையை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் நடத்தி வந்தேன். அந்த தொழிற்சாலை எனது பெயரில் உள்ளது. என்னுடன் நவீனும் சேர்ந்து தொழில் செய்து வந்தார். எங்களுக்குள் தொழிற்சாலையை நடத்துவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.
இதை பயன்படுத்தி ஜெயக்குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி கடந்த 2014-ஆம் ஆண்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, எனது தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்தார். மேலும் தொழிற்சாலை பூட்டி, அபகரித்துக் கொண்டார். நான் பல முறை எனது தொழிற்சாலையை திறக்க முயன்றும் ஜெயக்குமார், நவீன், ஜெயப்பிரியா தரப்பு எனக்கு அச்சுறுத்தல் கொடுத்தும், தகராறு செய்தும் வருகின்றனர். அந்த தொழிற்சாலையின் மதிப்பு ரூ.5 கோடியாகும். இச் சம்பவத்துக்கு பின்னர் ஜெயக்குமார், தனது மருமகனான எனது சகோதரர் நவீனுக்கு கும்மிடிப்பூண்டியில் ஒரு மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து கொடுத்துள்ளார். இந்த தொழிற்சாலையை ஜெயக்குமார் தனது மனைவி ஜெயக்குமாரி,மகள் ஜெயப்பிரியா ஆகியோர் பெயரில் வைத்துள்ளார்.
ஆனால் எனது தொழிற்சாலை திறக்க விடாமல் ஜெயக்குமார் தரப்பு மிரட்டி வருகிறது. இதனால் எனது தொழிலை முழுவதுமாக ஜெயக்குமார் நசுக்கியுள்ளார். எனது சொத்தை அபகரித்து,கொலை மிரட்டல் விடுத்து தொழிலையும் சீரழித்த ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மத்தியக் குற்றப்பிரிவுக்கு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த புகார் மனு குறித்து காவல்துறை விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவீன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் புகார் குறித்து விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து மகேஷ் அளித்த புகார் மனு குறித்து மத்தியக் குற்றப்பிரிவினர் விசாரணை செய்தனர். விசாரணையில் ஜெயக்குமார் தரப்பு மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மத்தியக் குற்றப் பிரிவினர் ஜெயக்குமார்,ஜெயப்பிரியா, நவீன் ஆகிய 3 பேர் மீது கொலை மிரட்டல்,அத்துமீறி நுழைதல், குற்றம் செய்ய தூண்டுதல், குற்றச் சதி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரிடம், மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான வாரண்டை வழங்கினர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஜெயப்பிரியா,நவீனை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

images - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories