திருச்செந்தூர் கோயிலில் காணிக்கை வருவாய் 3கோடிக்குமேல்…

Published:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்ரவரி மாத காணிக்கை
ரூ.3 கோடியே 4 லட்சத்து 16 ஆயிரத்து 275 கிடைத்தது. தங்கம் 2 ஆயிரத்து 284 கிராமும், வெள்ளி 26 ஆயிரத்து 517 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 132-ம் கிடைத்தது.
பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல் 18-ந் தேதி மாசி உற்சவ திருவிழா நடந்தது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் காணிக்கை வருவாய் முதல்முறையாக ரூ3கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர் பங்கேற்றனர்.

images15 - 2026

Related articles

Recent articles

spot_img