December 6, 2025, 7:52 AM
23.8 C
Chennai

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் உட்கட்சி பூசல்…

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில்
மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பே காங்கிரஸ் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ராகுல் காந்தி வருகிற 28-ந் தேதி சென்னை வருகிறார். முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களின் ஒருவன்” என்கிற நூலை ராகுல் காந்தி வெளியிடுகிறார்.சென்னை வருகை தரும் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர்கள் தலைமையில், வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுடன் ராகுல் காந்தி கலந்து கொண்டு ஆலோசனை செய்கிறார்.
இதில், உள்ளாட்சியில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றியும், காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்திருத்தம், உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து ‌இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில்
கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துக் கொண்டு இருந்தபோது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமரும் மேடையில் ஐ.என்.டி.யூ.சி. தலைவர் முனுசாமி அமர்ந்ததற்கு, முன்னாள் நிர்வாகி பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து ஒருமையில் பேசி மேடையிலிருந்து அவரை கீழே இறங்கும்படி கூறினாராம். இதன் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பே இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

நிர்வாகிகளின் மோதல் போக்கு காரணமாக செய்வதறியாமல் திகைத்த மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி திக்குமுக்காடினார். இரு தரப்பினரும் மாறி மாறி தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டனர்.இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உருவப்படத்தை பன்னீர்செல்வம் சேதப்படுத்தியதாக முனுசாமி கட்சி தலைமையிடம் புகார் செய்து பன்னீர்செல்வத்தை நீக்கும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories