சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் உட்கட்சி பூசல்…

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில்
மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பே காங்கிரஸ் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ராகுல் காந்தி வருகிற 28-ந் தேதி சென்னை வருகிறார். முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களின் ஒருவன்” என்கிற நூலை ராகுல் காந்தி வெளியிடுகிறார்.சென்னை வருகை தரும் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர்கள் தலைமையில், வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுடன் ராகுல் காந்தி கலந்து கொண்டு ஆலோசனை செய்கிறார்.
இதில், உள்ளாட்சியில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றியும், காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்திருத்தம், உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

இதுகுறித்து ‌இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில்
கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துக் கொண்டு இருந்தபோது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமரும் மேடையில் ஐ.என்.டி.யூ.சி. தலைவர் முனுசாமி அமர்ந்ததற்கு, முன்னாள் நிர்வாகி பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து ஒருமையில் பேசி மேடையிலிருந்து அவரை கீழே இறங்கும்படி கூறினாராம். இதன் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பே இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

நிர்வாகிகளின் மோதல் போக்கு காரணமாக செய்வதறியாமல் திகைத்த மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி திக்குமுக்காடினார். இரு தரப்பினரும் மாறி மாறி தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டனர்.இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உருவப்படத்தை பன்னீர்செல்வம் சேதப்படுத்தியதாக முனுசாமி கட்சி தலைமையிடம் புகார் செய்து பன்னீர்செல்வத்தை நீக்கும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ALSO READ:  இன்று சனி பெயர்ச்சி: சிறப்பு ரயில்கள் இயக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories