ஏடிஎம் இல் நூதனமாக பணம் கொள்ளை…

வேலுார் மாவட்டத்தில் வேலுார், கணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, சத்துவாச்சாரி பகுதி ஏ.டி.எம்., இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்தன.வங்கி அதிகாரிகள் ஆய்வில், இயந்திரத்தில் பணம் எடுக்க கார்டை நுழைக்கும் இடத்தில் பசை தடவப்பட்டிருந்ததும், ஒரே ஆசாமி இதை செய்ததும் தெரிந்தது. புகாரின்படி வேலுார் சைபர் கிரைம் போலீசார், ஏ.டி.எம்., மையங்களை கண்காணித்தனர். காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் அருகில் ஒரு ஏ.டி.எம்., மையத்தில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு நுழைந்த ஒருவரை, காட்பாடி போலீசார் பிடித்தனர்.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில்

அவர், பெங்களூரு, ஒயிட் கார்டனைச் சேர்ந்த திம்மராயப்பா, 37; ஏ.டி.எம்., திருடன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, 44 ஏ.டி.எம்., கார்டுகளை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது: திம்மராயப்பா, இரண்டு இயந்திரங்கள் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் நுழைவார். ஒன்றில், பணம் எடுக்க கார்டை நுழைக்கும் இடத்தில் பசை தடவி விட்டு, மற்றொரு இயந்திரத்தின் அருகில் நிற்பார். அப்போது வரும் வாடிக்கையாளர் பதிவு செய்யும், ரகசிய குறியீட்டு எண்ணை பார்த்து கொள்வார்.

வாடிக்கையாளர் பணத்தை எடுத்தவுடன், கார்டை எடுக்க முயல்வார். பசை ஒட்டியுள்ளதால் வெளியே எடுக்க முடியாது. இயந்திரம் பழுதடைந்து விடும். வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் தெரிவித்துவிட்டு சென்று விடுவார்.அதன்பின், திம்மராயப்பா கம்பி மூலமாக கார்டை எடுத்து, வேறு மையத்துக்கு சென்று, வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வார். இப்படி ஆறு மாதங்களில், 44 கார்டுகளை பயன்படுத்தி, 30 ஏ.டி.எம்., மையங்களில், 10 லட்சம் ரூபாய் வரை திருடியுள்ளார். தொடர்ந்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

gallerye 030622650 2971783 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories