ஓசூர், பழனியில் இருவர் கொலை….

ஓசூரில், தி.மு.க., பிரமுகர் ஹோட்டலில் திருடிய கும்பல், தடுக்க முயன்ற காவலாளியை குத்திக் கொலை செய்து தப்பியசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி முன்னாள் செயலர் கடலரசு மூர்த்தி. ஓசூர், தர்கா சந்திராம்பிகை ஏரிக்கரையில், ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு, தாமோதரன், 60, என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு பணி முடிந்த நிலையில், வீட்டுக்கு செல்லாமல் ஹோட்டலில் படுத்துக் கொண்டார்.நள்ளிரவில் ஹோட்டல் மேற்கூரை தகர சீட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல், கல்லாவில் இருந்த, 17 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளது.

சத்தம் கேட்டு எழுந்த தாமோதரன் தடுக்க முயன்றார். இதனால், அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியது.நேற்று காலை ஹோட்டலை ஊழியர்கள் திறந்தபோது, தாமோதரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கொலை நடந்த காட்சிகள் ஹோட்டலில் இருந்த, ‘சிசிடிவி’ கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

பழனியில் தந்தையை கொலை செய்த 17 வயது மகனை போலீசார் கைது செய்தனர்.

பழநி அருகே சத்திரப்பட்டி முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ஓமந்துாரான்.

கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்தார். குடிப்பழக்கம் இருந்தது. சனிக்கிழமை இரவு மது போதையில் மனைவியை அடித்துள்ளார். தடுக்க சென்ற 17 வயது மகனுக்கும் ஓமந்துாரானுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 17 வயது மகன் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் ஓமந்துாரான்இறந்தார். சத்திரப்பட்டி போலீசில் சிறுவன் சரணடைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories