ஓசூரில், தி.மு.க., பிரமுகர் ஹோட்டலில் திருடிய கும்பல், தடுக்க முயன்ற காவலாளியை குத்திக் கொலை செய்து தப்பியசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி முன்னாள் செயலர் கடலரசு மூர்த்தி. ஓசூர், தர்கா சந்திராம்பிகை ஏரிக்கரையில், ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு, தாமோதரன், 60, என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு பணி முடிந்த நிலையில், வீட்டுக்கு செல்லாமல் ஹோட்டலில் படுத்துக் கொண்டார்.நள்ளிரவில் ஹோட்டல் மேற்கூரை தகர சீட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல், கல்லாவில் இருந்த, 17 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளது.
சத்தம் கேட்டு எழுந்த தாமோதரன் தடுக்க முயன்றார். இதனால், அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியது.நேற்று காலை ஹோட்டலை ஊழியர்கள் திறந்தபோது, தாமோதரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கொலை நடந்த காட்சிகள் ஹோட்டலில் இருந்த, ‘சிசிடிவி’ கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
பழனியில் தந்தையை கொலை செய்த 17 வயது மகனை போலீசார் கைது செய்தனர்.
பழநி அருகே சத்திரப்பட்டி முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ஓமந்துாரான்.
கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்தார். குடிப்பழக்கம் இருந்தது. சனிக்கிழமை இரவு மது போதையில் மனைவியை அடித்துள்ளார். தடுக்க சென்ற 17 வயது மகனுக்கும் ஓமந்துாரானுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 17 வயது மகன் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் ஓமந்துாரான்இறந்தார். சத்திரப்பட்டி போலீசில் சிறுவன் சரணடைந்தார்.




