ஓசூர், பழனியில் இருவர் கொலை….

ஓசூரில், தி.மு.க., பிரமுகர் ஹோட்டலில் திருடிய கும்பல், தடுக்க முயன்ற காவலாளியை குத்திக் கொலை செய்து தப்பியசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி முன்னாள் செயலர் கடலரசு மூர்த்தி. ஓசூர், தர்கா சந்திராம்பிகை ஏரிக்கரையில், ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு, தாமோதரன், 60, என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு பணி முடிந்த நிலையில், வீட்டுக்கு செல்லாமல் ஹோட்டலில் படுத்துக் கொண்டார்.நள்ளிரவில் ஹோட்டல் மேற்கூரை தகர சீட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல், கல்லாவில் இருந்த, 17 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளது.

சத்தம் கேட்டு எழுந்த தாமோதரன் தடுக்க முயன்றார். இதனால், அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியது.நேற்று காலை ஹோட்டலை ஊழியர்கள் திறந்தபோது, தாமோதரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கொலை நடந்த காட்சிகள் ஹோட்டலில் இருந்த, ‘சிசிடிவி’ கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

பழனியில் தந்தையை கொலை செய்த 17 வயது மகனை போலீசார் கைது செய்தனர்.

பழநி அருகே சத்திரப்பட்டி முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ஓமந்துாரான்.

கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்தார். குடிப்பழக்கம் இருந்தது. சனிக்கிழமை இரவு மது போதையில் மனைவியை அடித்துள்ளார். தடுக்க சென்ற 17 வயது மகனுக்கும் ஓமந்துாரானுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 17 வயது மகன் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் ஓமந்துாரான்இறந்தார். சத்திரப்பட்டி போலீசில் சிறுவன் சரணடைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories