பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி சுசீந்திரம் கோயில்களில்‌ நாளை மகாசிவராத்திரி ‌‌‌‌‌‌விழா….

பிரசித்திபெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் , சுசீந்திரம் தாணுமாலயமூர்த்தி‌ கோவிலில் மார்ச்1இல் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்
மகா சிவராத்திரி விழா மார்ச் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரை வழக்கம்போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது. 

அதன் பிறகு மகா சிவராத்திரி விழாவையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது.பின்னர் 12-30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் அதிகாலை 1மணிக்கு 3-ம் கால பூஜையும் 1-30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடக்கிறது. 

ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 
அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் மறுநாள்அதிகாலை 4:30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் உள்ள பூஜைகள் நடக்கிறது மகாசிவராத்திரியையொட்டி ஒவ்வொரு கால பூஜையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி சுவாமிக்கு‌தங்க அங்கி சார்த்தி சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) நான்கு கால சாம பூஜை நடக்கிறது.
நாளை.இரவு 11 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது. அப்போது தாணுமாலய சாமிக்கு நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு தங்க அங்கி சார்த்தி முதல் கால பூஜை நடக்கிறது. 

நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாவது கால பூஜையும், மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு மூன்றாவது கால பூஜையும், 2.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து 4 மணிக்கு கோவிலை சுற்றி ஸ்ரீபலி விழாவும் நடக்கிறது.

சிவராத்திரியன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். 12 சிவாலயங்களிலும் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடி வரும் பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

images 4 - 2026
2021 11 06 - 2026
images 3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories