திமுக கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு..

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர் புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்ற நிலையில் நாளை மேயர் தலைவர் துணை மேயர் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ‌இட ஒதுக்கீடு வழங்கி தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி காங்கிரசுக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் பதவிகளும், இ.கம்யூ., மா.கம்யூ., வி.சி.க., மதிமுக., உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக போட்டியிடும் வேட்பாளர் பெயர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மாநகராட்சிகள் அனைத்தும் தி.மு.க., வசம் வந்தன. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில், 132ஐ பெரும்பான்மையுடன் கைப்பற்றி உள்ளது. அதேபோல, மொத்தம் உள்ள 490 பேரூராட்சிகளில், 435 தி.மு.க., வசம் வந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 1,373 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3,842 நகராட்சி கவுன்சிலர்கள், 7,604 பேரூராட்சி கவுன்சிலர்கள் மார்ச் 2 இல் பதவியேற்றனர்.

நாளை மார்ச் 4 இல் 21 மேயர், துணை மேயர்; 138 நகராட்சி தலைவர், துணைத் தலைவர்; 489 பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் என, மொத்தம் 1,296 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. இப்பதவிகளில் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு மாநகராட்சி துணை மேயர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்க்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர், சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர், 6 நகராட்சி தலைவர், 9 நகராட்சி துணைத் தலைவர் மற்றும் 8 பேரூராட்சி தலைவர், 11 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய கம்யூ.,: திருப்பூர் மாநகராட்சி துணை மேயர், ஒரு நகராட்சி தலைவர், 4 நகராட்சி துணைத் தலைவர், 4 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூ.,: மதுரை மாநகராட்சி துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ம.தி.மு.க ஆவடி துணை மேயர், ஒரு நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 3 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வி.சி.க கடலூர் துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 7 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ள நிலையில் பிற பதவிகள் அனைத்தும் திமுக வே தன்வசம் வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories