திமுக கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு..

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர் புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்ற நிலையில் நாளை மேயர் தலைவர் துணை மேயர் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ‌இட ஒதுக்கீடு வழங்கி தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி காங்கிரசுக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் பதவிகளும், இ.கம்யூ., மா.கம்யூ., வி.சி.க., மதிமுக., உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக போட்டியிடும் வேட்பாளர் பெயர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மாநகராட்சிகள் அனைத்தும் தி.மு.க., வசம் வந்தன. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில், 132ஐ பெரும்பான்மையுடன் கைப்பற்றி உள்ளது. அதேபோல, மொத்தம் உள்ள 490 பேரூராட்சிகளில், 435 தி.மு.க., வசம் வந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 1,373 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3,842 நகராட்சி கவுன்சிலர்கள், 7,604 பேரூராட்சி கவுன்சிலர்கள் மார்ச் 2 இல் பதவியேற்றனர்.

நாளை மார்ச் 4 இல் 21 மேயர், துணை மேயர்; 138 நகராட்சி தலைவர், துணைத் தலைவர்; 489 பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் என, மொத்தம் 1,296 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. இப்பதவிகளில் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு மாநகராட்சி துணை மேயர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்க்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர், சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர், 6 நகராட்சி தலைவர், 9 நகராட்சி துணைத் தலைவர் மற்றும் 8 பேரூராட்சி தலைவர், 11 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய கம்யூ.,: திருப்பூர் மாநகராட்சி துணை மேயர், ஒரு நகராட்சி தலைவர், 4 நகராட்சி துணைத் தலைவர், 4 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூ.,: மதுரை மாநகராட்சி துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ம.தி.மு.க ஆவடி துணை மேயர், ஒரு நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 3 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வி.சி.க கடலூர் துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 7 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ள நிலையில் பிற பதவிகள் அனைத்தும் திமுக வே தன்வசம் வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories