சென்னை, சாலிகிராமத்தில்,தன் தாய் மாமா ஸ்ரீநாதரெட்டி என்பவர் நடத்தி வரும், செக்யூரிட்டி நிறுவனத்தில் 2017ல் இருந்து மேலாளராக பணிபுரிந்தார்ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரவன் குமார் (29).பணி நிமித்தமாக, ஸ்ரீநாதரெட்டி அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், அனைத்து பொறுப்புகளையும் ஸ்ரவன் குமாரிடம் ஒப்படைத்து இருந்தார்.ஸ்வரனின் நடவடிக்கையில் திடீர் சந்தேகம் ஏற்பட்டதால், கணக்காளர் வாயிலாக, நிறுவனத்தின் 2018 – 21ம் ஆண்டுக்கான வரவு – செலவு குறித்து, ஸ்ரீநாதரெட்டி ஆய்வு செய்தார். அப்போது, ஸ்ரவன் குமார், 4.42 கோடி ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்தது. இது குறித்து நாதரெட்டி புகாரின்படி, ஆந்திராவில் பதுங்கியிருந்த ஸ்வரனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்


