எஃப்டி வட்டி உயர்த்திய வங்கி!

bank - 2026

கோடக் மஹிந்திரா வங்கியின் எஃப்டி விகிதங்கள்: எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கனரா வங்கிக்குப் பிறகு, இப்போது கோடக் மஹிந்திரா வங்கியின் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது.

முன்னணி தனியார் துறை வங்கியான கோடக் மஹிந்திரா பல்வேறு தவணைக்காலங்களின் நிலையான வைப்புத்தொகையின் (FD) வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது.

வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் அனைத்து உள்நாட்டு மற்றும் NRE வாடிக்கையாளர்களுக்குமானவை. வங்கியின் புதிய எஃப்டி விகிதங்கள் மார்ச் 9, அதாவது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய விகிதங்கள் ரூ. 2 கோடி வரையிலான எஃப்டிகளுக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடக் மஹிந்திரா வங்கி 365 முதல் 389 நாட்களில் மெச்யூர் ஆகும் எஃப்டி-க்கான வட்டியை 5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்கு முன் வங்கி இந்த கால அளவிற்கு 4.9 சதவீத வட்டியை செலுத்தி வந்தது.

7 முதல் 30 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 2.5 சதவீதமும், 31 முதல் 90 நாட்கள் வரையிலான எஃப்டி-களுக்கு 2.75 சதவீதமும், 91 முதல் 120 நாட்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 3 சதவீதமும் வட்டி வழங்க வங்கி இப்போது முடிவு செய்துள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கி 181 முதல் 363 நாட்கள் முதிர்வு கொண்ட எஃப்.டி-களுக்கு 4.40 சதவீத வட்டியையும், 364 நாட்கள் முதிர்வு காலத்துடன் கூடிய எஃப்.டி-களுக்கு 4.50 சதவீத வட்டியையும் செலுத்தும்.

390 நாட்கள் மற்றும் 23 மாதங்களுக்கும் குறைவான எஃப்.டி-களுக்கு 5.10 சதவிகிதம் செலுத்தப்படும். மூத்த குடிமக்கள் ஒவ்வொரு கால அளவிற்கான எஃப்.டி-களுக்கும் .50 சதவீதம் கூடுதல் வட்டியைப் பெறுவார்கள்.

எஸ்பிஐ-யின் எஃப்.டி வட்டி விகிதங்கள்

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை – 2.90%

46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை – 3.90%

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை – 4.40%

211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு – 4.40%

1 வருடத்திற்கு மேல் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு – 5.10%

2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு – 5.20 %

3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு – 5.45%

5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை – 5.50%

(சோர்ஸ்: www.paisabazaar.com) (மூத்த குடிமக்களுக்கு அனைத்து கால அளவிற்கும் 0.50 சதவீதம் கூடுதல் வட்டி)

எச்டிஎஃப்சி-ல் எஃப்டி வட்டி விகிதம்

7 முதல் 14 நாட்கள் – 2.50%

15 முதல் 29 நாட்கள் – 2.50%

30 முதல் 45 நாட்கள் – 3.00 %

46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை – 3.00 %

61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை – 3.00 %

91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை – 3.50%

6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை – 4.40%

9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலம் – 4.40%

1 வருடம் வரை – 5.00%

1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை – 5.00%

2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை – 5.20%

3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை – 5.45%

5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை – 5.60%

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories