சென்னை கோவை சேலம் நெல்லை மதுரை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வழக்கத்தை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகும்’ வரும் 16, 17ம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதையே மக்கள் சற்று குறைத்து விட்டனர். அந்தளவுக்கு வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது.
வீடுகளில் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாத நிலையில் சில நேரங்களில் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தாலும் அதனையும் தாண்டி வெப்பம் தெரிகிறது.வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் மண்பானை யில் தண்ணீர், தர்ப்பூசணி, ஜூஸ், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை தேடி அருந்தி வருவதால் இவைகளின் விலை அதிகரித்துள்ளது.
வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களை காத்து கொள்வதற்கு வெப்ப காலம் அதிகரித்து வருவதால் குளிர்ச்சியான உணவுகளை பொதுமக்கள் எடுத்துக்கொள்வது உகந்ததாக இருக்கும். மேலும் பருத்தி ஆடைகள் உடுத்துவது, இறுக்கமான ஆடைகளை பயன்படுத்தாமல் இருப்பது, வெப்பம் ஊடுருவாத ஆடைகளை அணிவது மூலம் அதிக உஷ்ணம் ஏற்படாமல் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
மேலும் அதிகளவு நீர் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். தர்பூசணி, வெள்ளரி, எலுமிச்சை சாறு, கிர்ணிப்பழம் ஆகியவை உடல் சூட்டை குறைக்கக் கூடியவை. எனவே பொதுமக்கள் அதனை பழமாகவும், பழச்சாறாகவும் உட்கொள்வது சிறந்ததாகும். இறைச்சி உண்பதை போதுமான அளவு கட்டுப்படுத்திக் கொள்வது போன்றவை வெப்ப காலத்தில் பொதுமக்கள் அதிக சூட்டை உணராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் சில அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள்.
நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வழக்கத்தை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.தமிழக உள் மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை முந்தைய நாட்களின் இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடும். சென்னையில் இன்று காலை லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதிகபட்சம், 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 16, 17ம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






