புத்தகங்களை எடுத்து வந்து புதுமணமக்களுக்கு சீர்!

books - 2026

எதிர் கோட்டை கிராமத்தில் நண்பனின் திருமணத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று நண்பர்கள் சீராக வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே எதிர்க்கோட்டையை சேர்ந்த சுப்புராஜ்- முத்துலட்சுமி தம்பதியின் மகனான நவநீதன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் மீனாட்சிபுரத்தை சேர்ந்த அனிதா என்பவருக்கும் நேற்று எதிர்க்கோட்டையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் 25 ஆயிரம் மதிப்பிலான 200-க்கு மேற்பட்ட புத்தகங்களை தாம்புல தட்டில் வைத்து சீர் வரிசை போல ஊர்வலமாக கொண்டு வந்து புதுமண தம்பதியினரிடம் வழங்கினார்கள்.

book - 2026

இந்த நிலையில் புத்தகங்களை சீர் வரிசையாக வழங்கியதை அந்த பகுதி மக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்தனர்.

தற்போது பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை செல்போனில் மூழ்கி இருப்பதால் அவர்களிடையே புத்தக வாசிப்பை பரவலாக்குவதன் மூலம் அரசியல் சிந்தனைகளையும் எடுத்துரைக்க முடியும் என மணமக்கள் தெரிவித்தனர்.

திருமணத்துக்கு பரிசு என தேவையற்ற பல அலங்கார அழகு பொருட்களை வழங்கும் நண்பர்களுக்கு மத்தியில், 200 புத்தகங்கள் பரிசாக வழங்கிய நண்பர்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

செல்போன்களில் மூழ்கி உறவுகளை மறக்கும் இந்த காலத்தில், புத்தகங்கள் மூலம் உறவுகளை வலுவாக்கியுள்ளனர் இந்த நண்பர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories