கோவையில் வீட்டில் தீ.. மூவர் பலி:

கோவையில் வீட்டில் இருந்த யு.பி.எஸ்.சில் மின்கசிவு ஏற்பட்டு அதில் இருந்து வெளியேறிய புகை காரணமாக வீட்டில் தூங்கிய மூவர் மூச்சுத்திணறி இறந்ததுடன், அவர்கள் வளர்த்து வந்த நாயும் இறந்தது

images 62 1 - 2026

கோவை உருமாண்டம்பாளையம் அடுத்த ஜோஸ்கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜோதிலிங்கம். இவரது மனைவி விஜயலட்சுமி(58). இவர்களுக்கு அர்ச்சனா(24), அஞ்சலி(22) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

அர்ச்சனா ஐ.டி. கம்பெனியிலும், அஞ்சலி பைனான்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஜோதிலிங்கம் இறந்து விட்டார். இதையடுத்து விஜயலட்சுமி தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இன்று காலை இவர்களது வீட்டில் இருந்து புகை வெளியேறி கொண்டிருந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வேகமாக ஓடி சென்று கதவை தட்டி பார்த்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் யாரும் கதவை திறக்கவில்லை. சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிய தொடங்கியது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர், பெரியநாயக்கன் பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் கவுண்டம்பாளையம் வடக்கு நிலைய தீயணைப்பு துறையினருடன் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, சமையல் அறையில் விஜயலட்சுமி மற்றும் அவரது மூத்த மகள் அர்ச்சனா இறந்த நிலையில் கிடந்தனர். மற்றொரு அறையில் அவரது இளையமகள் அஞ்சலி பிணமாக கிடந்தார். மேலும் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த வளர்ப்பு நாயும் இறந்து கிடந்தது.இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டில் இருந்த யு.பி.எஸ்.சில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியேறிய புகை காரணமாக 3 பேரும் மூச்சுத்திணறி இறந்ததுடன், அவர்கள் வளர்த்து வந்த நாயும் இறந்தது தெரியவந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories