கோவை-பெங்களூரு இரண்டடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் மார்ச் 31முதல் மீண்டும் இயக்கம்…

இந்தியாவில் கொரோனா அலை குறைந்ததையடுத்து வரும், 31ம் தேதி முதல் கோவை-பெங்களூரு இடையே இரண்டடுக்கு உதய் எக்ஸ்பிரஸ்
ரயில் இயக்கப்பட உள்ளது.

கடந்த, 2018 ஜூன் 8ம் தேதி கோவை – பெங்களூரு இடையே டபுள்டெக்கர் இரண்டடுக்கு உதய் எக்ஸ்பிரஸ்’
ரயில் சேவை துவங்கியது.

உதய் எக்ஸ்பிரஸ்’ எனப்பட்ட இந்த ரயிலில் எடை குறைந்த, பாதுகாப்பான எல்.எச்.பி., பெட்டி, ஏ.சி., சொகுசு இருக்கைகள், உணவருந்த டைனிங் பகுதி, கண்கவரும் உட்புற அமைப்பு, எல்.சி.டி., திரை, ரயிலின் வேகம், எஞ்சிய துாரம் உள்ளிட்ட விவரங்களை ஜி.பி.எஸ்.,(புவியிடம் காட்டி) உதவியுடன் அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டிருந்தது.

பயணிகளை கவர்ந்த இந்த ரயில் சேவை கொரோனாவால் இரண்டு ஆண்டாக நிறுத்தப்பட்டது. வரும், 31ம் தேதி முதல், 14 பெட்டிகளுடன் இந்த ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து காலை, 5:45 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஸ்டேஷன்களில் நின்று மதியம், 12:40க்கு பெங்களூரு அடையும்.
மறுமார்க்கமாக மதியம், 2:15க்கு புறப்படும் ரயில் இரவு, 9:00க்கு கோவை வந்து சேரும். புதன் தவிர, வாரத்தின் ஆறு நாட்கள் ரயில் இயங்கும் என, சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images 76 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories