கால்பந்து மைதானத்தில் நுழைந்து வீரரின் கழுத்தில் கைப்போட்டு செல்ஃபி! ரசிகரின் அத்துமீறலால் அதிர்ச்சி!

Lionel Messi - 2026

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கழுத்தை பிடித்து ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுத்த சம்பவம் மைதானத்தையே அதிர வைத்திருக்கிறது. சமூக வலை தளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் கால்பந்து உலகக்கோப்பை மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெற இருக்கிறது. அதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தகுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஈக்வடார் நாடுகள் களம் கண்டன. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் மேட்ச் டிரா ஆனது. இருப்பினும் முந்தைய ஆட்டங்களில் அர்ஜென்டினா 11 வெற்றிகளை பெற்று இருந்ததன் காரணமாக உலக கோப்பை போட்டிகளுக்கு அந்த அணி தகுதி பெற்றுள்ளது.

அர்ஜென்டினா – ஈக்வடார் போட்டி முடிவடைந்ததும் உலக கோப்பைக்கு தகுதி பெற்றதை அடுத்து அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். அப்போது தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் ஓடி வந்த ஒரு நபர் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கழுத்தை பிடித்து செல்பி எடுத்துக்கொண்டார்.

இது சக வீரர்கள் மற்றும் மைதானத்தில் இருந்த ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

மைதானத்திற்குள் ஓடிவந்து வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுக்க முயற்சித்த அந்த ரசிகரிடம் ‘ஸ்டாப்..ஸ்டாப்’ என மெஸ்ஸி கோபத்துடன் கூறியுள்ளார். ஆனாலும் அந்த ரசிகர் விட்டபாடில்லை.

இறுதியில் அவரை தள்ளி விட்டு அங்கிருந்து எரிச்சலுடன் நகர்ந்தார் மெஸ்ஸி. அதன்பின்னர் மைதானத்தின் பாதுகாப்பு பணியாளர்கள் அந்த ரசிகரை உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.

மேலும் அந்த ரசிகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக மைதான நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இன்னிலையில் தான் எடுத்த செல்பி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த ரசிகர். ‘எல்லா காலத்திலும் சிறந்த வீரர்’ என குறிப்பிட்டு அந்த வீடியோவை அவர் ஷேர் செய்துள்ளார்.

மேலும், ‘உங்கள் அழகான கால்பந்தின் மூலம் பல ஆண்டுகளாக நீங்கள் எனக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களும் நன்றி’ என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து லியோனல் மெஸ்ஸியின் கழுத்தை பிடித்து ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுத்த விவகாரம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories