நடிகர் பிருத்விராஜ்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள்! நூஜூம் சலீம் குட்டி கைது!

prithviraj - 2026

கேரளா நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் கேரள கலால் துறையினர் நடத்திய சோதனையில் கோகோயின், எல்.எஸ்.டி ஸ்டாம்ப்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தலில், ஒருவரை கைது செய்துள்ளனர்.

கொச்சியில் உள்ள தேவாரத்தில் உள்ள பிருத்விராஜ் சுகுமாரனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் கேரள கலால் குழு சோதனை நடத்தியதில் 6.92 கிராம் கோகோயின், 47.2 மில்லிகிராம் எல்.எஸ்.டி மற்றும் 148 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை கைப்பற்றினர்,

பிரித்திவிராஜ்’க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த புனலூரைச் சேர்ந்த ‘நூஜூம் சலீம் குட்டி’ என்ற 33 வயது நபரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர், மாநிலத்தில் உள்ள சில முக்கிய வியாபாரிகளிடம் இருந்து போதைப்பொருள் கொள்முதல் செய்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நடிகர் தனது குடியிருப்பை வாடகைக்கு விட்டதாக கேரள அதிகாரிகள் கூறினர். அவர் யாரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

“கைது செய்யப்பட்ட சலீம் குட்டி பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு, தொழில் தொடங்குவதற்காக இந்த ஆண்டு கொச்சிக்கு வந்தார்.

அடுக்குமாடி குடியிருப்புக்கு மாதம் ரூ.85,000 வாடகை செலுத்தி வந்தார். அடுக்குமாடி குடியிருப்பு வைத்திருக்கும் நடிகருக்கு இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லை. நுஜூமின் பெற்றோர் பல ஆண்டுகளாக மேற்கு ஆசிய நாட்டில் உள்ளனர்.

சலம் குட்டி அமெரிக்காவில் படிக்கும் போது போதைப்பொருள் பயன்படுத்தத் தொடங்கியதை ஒப்புக்கொண்டார், “என்று அவரை கைது செய்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இதேபோன்ற போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிறப்பு காவல்படையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஃபசலு என்பவரை கைது செய்தனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கொச்சியில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்தில் எல்.எஸ்.டி முத்திரைகள் அடங்கிய பார்சலை கலால் துறையினர் கைப்பற்றியதை அடுத்து, ஃபசலு கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், கொச்சியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 4 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஃபசுலு மற்றும் நுஜூம் ஆகியோர் தற்போது கேரள கலால் துறை அதிகாரிகளின் காவலில் உள்ளனர். வெளிப்படையாக, போலீசார் நடிகர் பிரித்திவிராஜ் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை ஆனால் போதைப்பொருள் கடத்தலில் நடிகருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories