போதை விருந்தில் பங்கேற்ற 142 பேர் கைது ..

ஐதராபாத் கேளிக்கை விடுதியில் இரவில் போதை விருந்தில் பங்கேற்ற விஐபிகள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் மகன், மகள்கள் என சுமார் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில்
ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் மகள், தெலுங்கு தேசம் எம்பியின் மகனும் அடங்கும்.

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் பப்பில் நேற்று இரவுபோதைப் பொருள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், பப்பில் இருந்த விஐபிகள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் என சுமார் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த பப்பில் இருந்து தடை செய்யப்பட்டுள்ள கோகோயின் போன்ற போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள 142 பேரில் தெலுங்கு நடிகர் நாக பாபுவின் மகளும், மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மருமகளுமான நிஹாரிகா கொனிடேலாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தனது மகளுக்கும் போதை மருந்து பயன்பாட்டுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று நடிகர் நாக பாபு வீடியோ வெளியிட்டுள்ளாராம்.
இவர்களை தவிர, பாடகரும், பிக் பாஸ் 3 தெலுங்கு ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளருமான ராகுல் சிப்ளிகுஞ்சும் ஒருவர். இவர், கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஐதராபாத் காவல்துறை போதைப் பொருளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தபோது அதற்கான பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் மகள், தெலுங்கு தேசம் எம்பியின் மகன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் கைது செய்யப்பட்ட பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச், போதைப் பொருளுக்கு எதிரான ஐதராபாத் போலீசின் பிரசார பாடலையும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்டுள்ள நிஹாரிகா தமிழில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்னும் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

gallerye 105720625 2999686 - 2026
IMG 20220404 WA0063 - 2026

இது குறித்து ஐதராபாத் போலீசார் கூறுகையில், ஐதராபாத் முழுவதும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரேடிசன் புளூ நட்சத்திர ஹோட்டலில் நடத்திய சோதனையில் 35 பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories