திருநாரையூரில் உள்ள பிரசித்திப் பெற்ற பொல்லாப் பிள்ளையார் கோவிலில் நடிகர் செந்தில் தரிசனம் செய்தார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் நேற்று நடந்த தனது நண்பர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து காமெடி நடிகர் செந்தில் வந்திருந்தார்.
முன்னதாக, பிரசித்திப் பெற்ற பொல்லாப்பிள்ளையார் சுவாமி தரிசனம் செய்ய காட்டுமன்னார்கோவில் அடுத்த திருநாரையூருக்கு சென்றார். அங்கு, பொல்லாப் பிள்ளையாருக்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார்.
பின், திரிபுரசுந்தரி சமேத சவுந்தரநாதர் சுவாமியை தரிசனம் செய்து கோவிலை வலம் வந்தார். சிதம்பரம் வெங்கடேச தீட்சிதர், இன்ஜினியர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.