வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை சுங்கச்சாவடி அருகே மாயமான சம்பவம்..

வெளியூர் சென்ற மளிகைக்கடைக்காரர் வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் தங்கபெருமாள். தற்போது சென்னை வில்லிவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி மளிகைகடை நடத்தி வருகிறார்.

இவர் விளாத்திகுளத்தில் நடைபெற உள்ள திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் டெம்போ டிராவலர் வேனில் ஊருக்கு புறப்பட்டார். அவருடன் அவரது மகன் பெரியசாமி, மனைவி சித்ரா உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.

ஊருக்கு புறப்படும்போது நகை உள்பட முக்கிய பொருட்களை அட்டைபெட்டிகளில் கட்டி வேனின் மேல் பகுதியில் வைத்து சென்றுள்ளனர். ஊருக்கு செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சுங்கசாவடி மைய பகுதியில் வேனை நிறுத்தி பொருட்கள் சரியாக உள்ளனவா? என்று பார்த்தனர்.

பின்னர் தியாகதுருகம் கூட்டுரோடு சின்னக்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஒரு டீக்கடையில் வேனை நிறுத்திவிட்டு அனைவரும் டீ குடித்தனர். அப்போது பார்த்தபோது வேனின் மேல் இருந்த ஒரு அட்டைபெட்டி மாயமாகி இருந்தது தெரியவந்தது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

அந்த அட்டைபெட்டியில் 264 பவுன் தங்க நகைகள் இருந்ததது. அதிர்ச்சியடைந்த தங்கபெருமாள் இதுகுறித்து திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி, தனிப்பிரிவு ஏட்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சுங்கச்சாவடி மற்றும் டீக்கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் வேனின் மேல் இருந்த அட்டைபெட்டியை யாராவது திருடி சென்றனரா? அல்லது வழியில் அந்த பெட்டி தவறி விழுந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வேனை ஓட்டிவந்த செங்கல்பட்டை சேர்ந்த டிரைவர் பாண்டியிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

264 பவுன் நகை மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கப்படுவதில்லை. இதுவும் திருடர்கள் கைவரிசை காட்ட வசதியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..
images 42 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories