சீனியர் சிட்டசன்ஸ்: லோயர் பர்த் பிரச்சனைக்கு.. ஐஆர்சிடிசி தகவல்!

train service - 2026

ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ரயில் பயணத்தில், டிக்கெட் மற்றும் பெர்த் தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.

பயணத்தின் போது கீழே இருக்கும் லோயர் பெர்த் தேவைப்படும் நபராக நீங்கள் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய ரயில்வே ரயில்களில் பயணம் செய்யும் போது மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் பலமுறை டிக்கெட் முன்பதிவின் போது மூத்த குடிமக்களுக்கான கோரிக்கை விடுத்த பிறகும் கீழ் பெர்த் கிடைக்காத நிலையும் ஏற்படுவதுண்டு. இதனால் அவர்களுக்கு பயணத்தில் சிரமங்கள் ஏற்படுகின்ன.

ஆனால் இப்போது நீங்கள் லோயர் பெர்த் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. லோயர் பர்த் கிடைப்பதை எவ்வாறு உறுதி செய்வது என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் பயணி ஒருவர் இந்திய ரயில்வேயிடம் மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனை பற்றி கூறி, இது ஏன் நடக்கிறது என கேள்வி எழுப்பி, இதை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்து, அவர், ‘சீட் ஒதுக்கீட்டின் லாஜிக் என்ன? நான் மூன்று மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் முன்னுரிமையில் டிக்கெட் புக் செய்திருந்தேன்.

அப்போது 102 பெர்த்கள் இருந்தன. இருப்பினும் அவர்களுக்கு மிடில் பெர்த், அப்பர் பெர்த் மற்றும் சைட் லோயர் பர்த்களே கிடைத்தன. நீங்கள் இதை சரி செய்ய வேண்டும்.’ என எழுதியிருந்தார்.

இதற்கு இந்திய ரயில்வே ட்வீட் மூலம் தனது பதிலை தெரிவித்தது.

ஐஆர்சிடிசி-யின் பதில் என்ன?

இந்தக் கேள்விக்கு ஐஆர்சிடிசி ட்விட்டரில் பதில் அளித்துள்ளது. ஐஆர்சிடிசி தனது பதிலில், ‘ஐயா, லோயர் பெர்த்கள்/மூத்த குடிமக்கள் ஒதுக்கீட்டு பெர்த்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அவர்கள் தனித்து அல்லது இருவராக பயணிக்கும் போது (ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் நியமங்கள் பொருத்து) இது கிடைக்கும்.’ என தெரிவித்தது.

இரண்டுக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் இருந்தாலோ, அல்லது, ஒருவர் மூத்த குடிமக்கள் பிரிவிலும், மற்றவர் அந்த பிரிவில் வராமல் இருந்தாலும், முன்பதிவு அமைப்பு இதை கருத்தில் கொள்ளாது என்றும் ஐஆர்சிடிசி கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories